(து - ம்,) என்பது, தலைவன் வரையாது களவொழுக்கத்துப் பலகாலும் பகற்குறி வந்தொழுகுதலை விலக்கித் 'தோழி யாம் சேரியின் கண்ணே செல்லுகின்றேம்; நீ வாழ்க; நின்னைப் பிரிதலினாலாற்றாளாய தலைவியின் மெய்முன்னமே மாமையுடையதாதலின், இனிநின் மணமுரசொலி கேட்குமுன் இறந்துபடுமதுகா'ணென அவன் வரையுமாற்றானே வெளிப்படையாக அவலித்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "நாற்றமுந் தோற்றமும்" (தொல்-கள- 23) என்னும் நூற்பாவின்கண் "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" என்பதனால் அமைத்துக்கொள்க.
| பிரசந் தூங்கப் பெரும்பழந் துணர |
| வரைவெள் ளருவி மாலையின் இழிதரக் |
| கூலம் எல்லாம் புலம்புக நாளும் |
| மல்லற்று அம்மஇம் மலைகெழு வெற்பெனப் |
5 | பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட! |
| செல்கம் எழுமோ சிறக்கநின் ஊழி |
| மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள் |
| நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் |
| பூண்தாழ் ஆகம் நாணட வருந்திய |
10 | பழங்கண் மாமையும் உடைய தழங்குகுரல் |
| மயிர்க்கண் முரசின் ஒருமுன் |
| உயிர்க்குறி எதிர்ப்பை பெறலருங் குரைத்தே. |
(சொ - ள்.) பிரசம் தூங்க பெரும்பழம் துணர வரை வெள்அருவி மாலையின் இழிதர - கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; புலம் கூலம் எல்லாம் புக - சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாளும் இம் மலைகெழு வெற்பு மல்லற்று எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் - நாட - எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி - யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் - பக்கங்கள் மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய