பக்கம் எண் :


175


புன்னைநிழலின்முன் இருவோமையும் தோழி கூட்டுவிப்பாளாவ தென்றதாம். கேட்பார் - தோழி. காலம் - நிகழ்காலம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - தோழி கேட்டுக் குறைமுடிப்பாளாவது.

    (பெரு - ரை.) பாக்கமுமுறைநனி இனிதுமன் என்ற தொடரைப் பாக்கமும் உறை நனி இனிதுமன் எனக் கண்ணழித்துப் பாக்கமே யாயினும் நோக்கங்காணா முன்பெல்லாம் உறைதற்குப் பெரிதும் இனிதாயிருந்தது; இப்பொழுது அது கழிந்தது என்று பொருள் கூறுதலே நன்று.

    இனி, இறவின் குப்பை உணங்குதிறன் நோக்கிப் புன்னைநிழலின் முன்கொணர்ந்து பரப்புதல் போன்று நீயும், என்னைப் பிரிந்துறைதலானே வருந்தியிருக்கும் தலைவியின் நிலைநோக்கி அவளை எனக்கு அணுக்கியாக்கித் தருக என உள்ளுறையாகக் கூறியபடியாம் எனக் கோடலும் தகும். கூடிப்பிரிந்தமையான் அவளும் என்னைப்போல வருந்தியே இருப்பள் என்பது குறிப்பு.

(101)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, காமமிக்க கழிபடர்கிளவி.

    (து - ம்,) என்பது, இருவகைக் குறியானும் வந்தொழுகுந் தலைமகன் இடையீடுபட்டு வாராதொழியக்கண்ட தலைமகள் வரைதல் விருப்பினளாய் வேட்கை பெரிதுஞ் சிறப்பச் சிந்தித்துக் கிளியை நோக்கி கிள்ளாய்! என் தலைவரது நாட்டிலுள்ள நின் சுற்றத்தாரிடஞ் சென்றகாலை ஆங்கு என் காதலரை நோக்கி இம்மலைக்குறவர் மகள் மீட்டும் தினைப்புனங்காவல் செய்யுமாறு வந்தனளென இவ்வொன்றனை மட்டுஞ் சொல்வாயாகவென்று இரந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு. "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

    
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி 
    
அஞ்ச லோம்பி ஆர்பதங் கொண்டு 
    
நின்குறை முடித்த பின்றை என்குறை 
    
1 செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் 
5
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு 
    
நின்கிளை மருங்கிற் சேறி யாயின் 
    
அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக் 
    
கானக் குறவர் மடமகள் 
    
ஏனல் காவல் ஆயினள் எனவே. 
  
 (பாடம்) 1. 
சொல்லல்வேண்டுமார்.