பக்கம் எண் :


177


    (து - ம்,) என்பது, பொருளீட்டுமாறு தலைவியைப் பிரிந்து செல்கின்ற தலைமகன் சுரத்தினிடைத் தன் காதலியைக் கருதிக் கவன்ற நெஞ்சைநோக்கி யாம் காட்டின்கண் வந்து வருந்துகின்றோம்: இவ்விடத்துப் பொருள் நசைக்காகச் செல்வோமெனினும் அன்றி மீள்வோமெனினும் என்னாலோரிடையூறும் இல்லையாதலின் நீ இவ்விரண்டனுளொன்றை ஆராய்ந்து எனக்குச் சொல்லென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
ஒன்றுதெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன்கால் 
    
1 சிறியிலை வேம்பின் பெரிய கொன்று 
    
கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பின் 
    
களிறுநின்று இறந்த நீரல் ஈரத்துப் 
5
பால்வீ தோல்முலை அகடுநிலஞ் சேர்த்திப் 
    
பசியட முடங்கிய பைங்கண் செந்நாய் 
    
மாயா வேட்டம் போகிய கணவன் 
    
பொய்யா மரபின் பிணவுநினைந்து இரங்கும் 
    
விருந்தின்வெங் காட்டு வருந்துதும் யாமே 
10
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் 
    
மீள்வாம் எனினும் நீதுணிந் ததுவே. 

    (சொ - ள்.) நெஞ்சே புன் கால் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று கடாஅம் செருக்கிய கடுஞ் சினம் முன்பின் களிறு - என் நெஞ்சமே! புல்லிய காம்பையுடைய சிறிய இலையையுடைய வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை முறித்துத் தள்ளி மதத்தாற் செருக்குண்ட கடிய சினமும் வலிமையுமுடைய களிற்றியானை; நின்று இறந்த நீர் அல் ஈரத்துப் பால்வீ தோல்முலை அகடு நிலம் சேர்த்தி - நின்று கழித்தகன்ற நன்னீரல்லாத இழிந்த நீரினாலாகிய ஈரத்துப் பால் வற்றிய தோலாகிய முலையையுடைய வயிற்றை (நிலத்தின்கண்) பொருத்தி; பசி அட முடங்கிய பைங்கண் செந்நாய் - பசி வருத்துதலானே வருந்தி முடங்கிக் கிடந்த பசிய கண்ணையுடைய செந்நாய்ப் பிணவினது; மாயா வேட்டம்போகிய கணவன் பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் - கெடாத வேட்டைமேற் சென்ற கணவனாகிய செந்நாயேற்றை தான் உண்மையாகத் தன்பிணவை முன்பு புணர்ந்த தன்மையைக் கருதி வருந்தாநிற்கும்; விருந்தின் வெம் காட்டு யாம் வருந்துதும் - இதுகாறும் புக்கறியாத புதுவதாகிய கொடிய காட்டின்கண்ணே வந்து புகுந்து யாம் வருந்துகின்றோம்; ஆள் வினைக்கு அகல்வாம் எனினும் மீள்வாம் எனினும் நீ துணிந்தது ஒன்று தெரிந்து

  
 (பாடம்) 1. 
சிறியிலைவேலம்.