(து - ம்,) என்பது, தலைமகன் இடையீடின்றிக் கொடிய காட்டு நெறியாக இரவுக்குறி வந்தொழுகக் கண்டஞ்சிய தலைமகள் இங்ஙனமன்றி வரைந்தெய்தின், இவ்வச்சம் இல்லையாகுமெனக் கருதி அதனைத் தோழி கேட்டுத் தலைமகனுக் கறிவுறுத்தும்வண்ணம் தலைவனது மார்பை விரும்பியுறையும் யானேயல்லது அவன் வருகின்ற கொடிய நெறியைக் கருதுவார் பிறர் யாவருளரென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, 'பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்' (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.
| பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை |
| தேங்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே |
| துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் |
| குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த |
5 | தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது |