பக்கம் எண் :


178


உரைத்திசின் - பொருள்செய் முயற்சி தலைக்கீடாகச் செல்வோமென்றாலும், அங்ஙனம் செய்யாது மீண்டு ஊர்புகுவோ மென்றாலும் யான் தடுப்பதொன்றுமில்லையாதலின் அவ்விரண்டனுள் நீ துணிந்தவொன்றனை ஆராய்ந்துரைப்பாயாக !; எ - று.

    (வி - ம்.) முன்பு - வலிமை. விருந்து - புதுமை. நீரல்லாநீர் - மூத்திரம்.

    உள்ளுறை :- நீரில்லாத ஈரத்துப் பிணவு பசியால் வருந்த வேட்டை மேற்சென்ற அதன் கணவனாகிய செந்நாயேற்றைர் தான் சென்றவிடத்துத் தன் பிணவைக் கருதி வருந்து மென்றது படுக்கை கொள்ளாது வேற்றிடத்தும்போய்க் காமவெப்பந்தாங்காது நம் காதலி தளிர்மேலே கிடந்து காமத்தால் வருந்தப் பொருள்வயிற் போந்த நாம் ஈண்டு அவளைக் கருதிப் புலம்பா நின்றே மென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல்: பயன் - இடைச்சுரத்தழுங்கல்.

    (பெரு - ரை.) நீ துணிந்ததாகிய ஒன்று என இயைக்க. பெரிய: பலவறிசொல். பொய்யா மரபின் பிணவு என்றதற்குக் காதற்கேண்மையிலே பொய்த்தல் இல்லாத முறையினையுடைய பிணவு எனல் நன்றாம். மீள்வதே நன்றென்பது என்துணிவு என்பான் யாம் வெங்காட்டு வருந்துதும் என்றான். நீ துணிந்ததொன்றனையும் மீண்டும் ஆராய்ந்து துணிந்து கூறுதி, என்று வற்புறுப்பான் நீ துணிந்தது ஒன்று தெரிந்து உரை என்றான். பிணவின் துயர்நிலையை நினைந்து இரங்கும் எனல் சீரிது. 'பாலவி தோல்முலை' என்றும் பாடம்.

(103)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தலைவி ஆறுபார்த்துற்ற அச்சத்தாற் சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைமகன் இடையீடின்றிக் கொடிய காட்டு நெறியாக இரவுக்குறி வந்தொழுகக் கண்டஞ்சிய தலைமகள் இங்ஙனமன்றி வரைந்தெய்தின், இவ்வச்சம் இல்லையாகுமெனக் கருதி அதனைத் தோழி கேட்டுத் தலைமகனுக் கறிவுறுத்தும்வண்ணம் தலைவனது மார்பை விரும்பியுறையும் யானேயல்லது அவன் வருகின்ற கொடிய நெறியைக் கருதுவார் பிறர் யாவருளரென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, 'பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்' (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

    
பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை 
    
தேங்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே 
    
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் 
    
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த 
5
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது