பக்கம் எண் :


18


9. பாலைபாடிய பெருங்கடுங்கோ
     திணை : பாலை.

     துறை : இஃது, உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.

     (து - ம்.) என்பது, தலைவி கருதியவண்ணம் அவளை இரவிலே அழைத்துக்கொண்டு செல்லுந் தலைமகன் விடிந்தபின் சுரமும் இடையூறுங் கடந்து போகுழித் தலைமகளை நோக்கி நெறியெங்கும் பொழிலும் ஊர்களுமாயுள்ளனவாதலின், நீ வழிவிளையாடி வருந்தாதேகு எனக் கூறி மெல்லக்கொண் டேகா நிற்பது.

     (இ - ம்.) இதனை "ஒன்றாத் தமரினும் பருவத்தும்" (தொல்-அகத்-41) என்னும் நூற்பாவின்கண் "அப்பாற்பட்ட ஒருதிறத்தானும்" என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

     இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர் பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தமைக்கு எடுத்துக்காட்டுவர் (தொல். அகத். 15. மேற்கோள்.)

    
அழிவில முயலு மார்வ மாக்கள் 
    
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்  
    
கலமரல் வருத்தந் தீர யாழநின் 
    
னலமென் பணைத்தோ ளெய்தின மாகலின் 
5
பொரிப்பூம் புன்கி னெழில்தகை யொண்முறி  
    
சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி  
    
நிழல்காண் தோறு நெடிய வைகி 
    
மணல்காண் தோறும் வண்ட றைஇ 
    
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே! 
10
மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் 
    
நறுந்தண் பொழில கானங் 
    
குறும்ப லூரயாஞ் செல்லும் ஆறே. 

     (சொ - ள்.) வால் எயிற்றோயே - வெள்ளிய பற்களையுடையோய!்; யாம் செல்லும் ஆறு கானம் - யாம் செல்லும் நெறியில் உள்ள காடெல்லாம்; மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நறுந் தண்பொழில - மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவி விளையாடும் நறிய தண்ணிய சோலையை யுடையன; குறும்பல் ஊர - அன்றியும் அடுத்தடுத்துள்ள பல ஊர்களையுமுடையன; அழிவு இல முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டு ஆங்கு - சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வ மாந்தர் அக்காரியம் முற்றுப்பெறுமாறு தாம் வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற் போல; அலமரல் வருத்தந்