(து - ம்,) என்பது, பொருள்வயிற் பிரிந்து சுரத்தின்கட் சென்ற தலைமகன் தலைவியைக் கருதி மீளலுற்ற நெஞ்சினை நோக்கி, நெஞ்சமே, நீ முதலிலே காடு கடுமையதென்னாமல் நம் காதலி அங்கு வருந்தும்படி புறப்பட்டு நெடுந்தூரம் வந்துற்றனை: இன்று மீளலுறுவையாயின் நின் முயற்சி நன்று கண்டாய்; இங்ஙனமே நீ வாழ்வாயாகவென இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "கரணத்தினமைந்து முடிந்தகாலை" (தொல். கற். 5) என்னும் நூற்பாவின்கண் வரும் 'மீட்டுவரவு ஆய்ந்த வகையின்கண்ணும'் என்னும் விதி கொள்க.
| முளிகொடி வலந்த முள் அரை இலவத்து |
| ஒளிர்சினை அதிர வீசி விளிபட |