பக்கம் எண் :


191


இனி, இச்செய்யுளின்கண் "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தாதை சோறுள்ளாள் பொழுது மறுத்துண்ணும் எனத் தலைவனும் தலைவியும் பெரிதும் நல்குரவுற்றனர்" என்பதுபட வருதல் வழுவேயாயினும்

  
"சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு 
  
 அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே" 

என (தொல். பொருளியல். 51) வழுவமைத்தலின் அமையும் என்க. இதன்கண் "குடிவறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது" என ஆசிரியர் நச்சினார்க்கினியர் இச்செய்யுளையே இந்நூற்பாவிற்குக் காட்டி விளக்கினர்.

(110)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைவிக்குரைத்தது.

    (து - ம்,) என்பது, தலைவன் பிரிதலாலே தலைமகள் வருந்துவதறிந்த தோழி அவன் வருதற்கறிகுறியாகிய நன்னிமித்தந் தோன்ற அது கொண்டு தலைவியை நோக்கி 'நமது பாக்கம் கல்லென்றொலிக்கும்படி கொண்கனது தேர் வருமாதலின் நீ வருந்தாதேகொள்'ளென அவள் தெளிந்து ஆற்றியிருக்குமாறு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 1 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.

    
அத்த இருப்பைப் பூவின் அன்ன 
    
துய்த்தலை இறவொடு தொகைமீன் பெறீஇயர் 
    
வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர் 
    
மரன்மேற் கொண்டு மான்கணந் தகைமார் 
5
வெந்திறல் இளையவர் வேட்டெழுந் தாங்குத்  
    
திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி 
    
வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி  
    
நிணம்பெய் தோணியர் இகுமணல் இழிதரும் 
    
பெருங்கழிப் பாக்கங் கல்லென 
10
வருமே தோழி கொண்கன் தேரே. 

    (சொ - ள்.) தோழி அத்தம் இருப்பைப் பூவின் அன்ன துய்த்தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் - தோழீ ! சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; வரி வலைப் பரதவர் கருவினைச்சிறார் - பின்னி