பக்கம் எண் :


192


வரிந்த வலையையுடைய பரதவர்தம் வன்மை மிக்க தொழிலையுடைய சிறுமக்கள்; மரன் மேற்கொண்டு மான்கணந் தகைமார் வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு - மரங்களின்மேலேறி நின்று மானினங்களைத் தகைக்கும் பொருட்டு வெய்ய வலியையுடைய வேட்டுவச்சிறுவர் விரும்பி எழுந்தாற்போல; திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி - மீன் பிடிக்கும் படகின் மேலேறிக் கொண்டு கடற்பரப்பின்கண்ணே கடந்து சென்று; வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் - ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பிடித்து அவற்றைத் துண்டித்து இறைச்சிகளை நிரப்பிய தோணியராய் மீண்டுவந்து காற்று வீசிப் பரப்பிய மணற்பரப்பில் இறக்கியிடும்; பெருங் கழிப்பாக்கம் கல்லென கொண்கன் தேர் வரும் - பெரியகழி சூழ்ந்த பாக்கம் கல்லென ஒலிக்குமாறு கொண்கனது தேர் வாராநிற்குமாகலின் நீ வருந்தாதே கொள் ! எ - று.

    (வி - ம்.) வரிவலை - கட்டிய வலை. கருவினை. கருமை வன்மை; ஈண்டுப் பாவ வினையன்று, மரபுக்குரிய தொழிலைச் செய்வதனால். கெண்டுதல் - வெட்டுதல். இகுதல் - சொரிதல். சுறாமீன் கொம்பை வெட்டி ஆண்டே கடலிற் போகடலானும் ஏனைப் பெருமீன்களைத் தறித்துக் கொணர்தலானும் வழக்குண்மை யறிக. சிறார் திமில்மேற்கொண்டென்க. திமில் - மீன் பிடிக்கும் படகு. விரிச்சி - நிமித்தம்.

    இறைச்சி :- சிறார் திரைச்சுரத்திற்சென்று பிடித்துக்கொணர்ந்த மீனினங்களை மணலின்கண் இறக்கியிடுமென்றது தலைவர் வேற்றுநாட்டிற் சென்று ஈட்டிக்கொணர்ந்த பொருளெல்லாம் நமதில்லகத்தே பரப்பாநிற்பர்காணென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளை யாற்றுவித்தல். கைகோள் - கற்பு.

    (பெரு - ரை.) மான்கணந் தகைமார் என்ற குறிப்பால் வெந்திறல் இளையவர் என்றது வேட்டுவச் சிறுவர்க்காயிற்று. வேட்டுவச் சிறுவர் பரதவர் சிறுவர்க்குவமை.

(111)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, பருவவரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

    (து - ம்,) என்பது, வினைவயிற் பிரியுந் தலைவன் குறித்துச்சென்ற பருவம் வருதலும் அவன் வாராமையறிந்து ஆற்றாத் தலைவியை ஆற்றுவிக்குந் தோழி "அவன் வருதலையறிந்து கடலினீரை ஆவிவடிவாக வாங்கிப் பருகி மின்னியிடித்துப் பெய்யத் தொடங்கிய மழைக்கு யான் யாது கைம்மாறு செய்ய வல்லே" னென வலியுறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனையும் மேற்செய்யுட்கோதிய "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக்கொள்க.