பக்கம் எண் :


208


முள் எயிறு தோன்ற முறுவல் கொண்டமுகம் காண்கம் - ஆதலின் நமது முயக்கத்துக்கு இன்றியமையாத இவளது சிறிய முட்போன்ற எயிறு சிறிது தோன்றுமாறு நகை கொண்ட முகத்தையாம் காண்பேமாகி யிராநிற்போம்; எ - று.

     (வி - ம்.) செழுஞ்செய் பேழையென்னும் பாடத்துக்கு, குழைபெய்து போகட்ட செய்பேழையுடைய காண்டகு நல்லிலென மாறிக் கூட்டுக.

    தாழ் - மோதிரம். எமக்கு: உருபுமயக்கம். தில்: விழைவு. அரிவை அட்டிலோளென்றது புரையறந்தெளிதல். நப்புலந்து - நம்மைப் புலந்து: இரண்டன்றொகை: நம்புலந்தெனற்பாலது, 'அன்னபிறவும்' (தொல். எழுத்து. 157) என்றதனால் மெல்லெழுத்துப் பெறுதற்குரிய விரவுப் பெயர் வல்லொற்றுப் பெற்றுநின்றது.

    ஒப்புரவுக்கு ஒல்காளாதலின் விருந்து வருகவென்றான். முகந்திரிந்து நோக்காது இன்னகையொடு நோக்கல் விருந்தோம்பற்கு வாயிலாதலின் அஃது அவள் கண்ணதேயாம். அவ்வாயில்வழியே தானுமுய்தலின் முகங்காண்கமென்றான். மெய்ப்பாடு - உவகை. பயன் - வாயில் பெற்றுமகிழ்தல்.

     (பெரு - ரை.) இதனுள் ஊடற் குறிப்பினளாகிய தலைவி மனை வாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விருப்பினளாதலின் நன்னெறிப்படர்தல் ஆயிற்று. 'வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ' என்றும், சிவப்பான்று என்றும் பாடவேற்றுமையுண்டு. இந்தப் பாடங்களே சிறப்புடையனவுமாகும். நப்புலந்தும் அட்டிலோளே எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள்விகாரத்தாற்றொக்கது. புலவி கூர்ந்தும் சிறுகாலை அட்டில்புக்குச் செம்மையுற அடிசிலாக்குதலும் அவள் மாண்பினை யுணர்த்துதல் உணர்க.

(120)
  
     திணை : முல்லை.

     துறை : இது, வினைமுற்றி மறுத்தருந் தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.

     (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீண்டு வரும்பொழுது காதலியை நினைந்து கவன்ற தலைமகனைத் தேர்ப்பாகன் நோக்கி 'மனைவியினுடைய தோளிலே துயிலுவதை விரும்பினோய், வருந்தாதே கொள்; நின் கண்ணி வாழ்க; நீ விரும்பிய காதலியினூர் இப்புறவத்து ளிருக்கின்றதாதலின், விரையச் சென்று காணுமாறு இன்னே தேரைச் செலுத்துகிற்பேன் கா'ணெனத் தெருட்டிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "ஆற்றது பண்பும் கருமத்து வினையும் . . . . . தோற்றஞ்சான்ற அன்னவை பிறவும் இளையோர்க்குரிய கிளவி என்ப" (தொல். கற். 30) என்னும் நூற்பாவினால் அமைத்துக் கொள்க. என்னை ? தேர்ப்பாகனும் தலைவன் ஏவலிளையரில் ஒருவனே ஆகலின் என்க. இனி, பாகன் கூற்றிற்கு உரியவனாக ஆசிரியர் தொல்காப்பியனார்