(து - ம்.) என்பது, களவொழுக்கத்திலே காணும்பொழுதினுங் காணாப்பொழுது பெரிதாகலாற் பிரிந்துறையுந் தலைவி ஆற்றாளாகித் துன்புறுவதையும் தலைவன் சிறைப்புறத்து வந்திருப்பதனையும் அறிந்த தோழி அவன் விரைய வரைந்து கொள்ளுமாற்றானே கூறுவாளாய்த் தலைவியை நோக்கி நீ அணிந்து, ஓடிப் பார்க்கும் விளையாடலு மில்லையாம்படி நினக்குற்ற நோயை எனக்குரையாயென ஆராய்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய விதியே அமையும்.
| உரையாய் வாழி தோழி இருங்கழி |
| இரையார் குருகின் நிரைப்பறைத் தொழுதி |