(து - ம்.) என்பது, தலைவனாலே பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனை நோக்கி ஐயனே! தலைவி தனியே யிருப்பதை யான் ஆற்றகிலேன் ஆயினும், தானே வந்தெய்தியதே யென்று வருந்துவளாதலின் இனி, நீ பிரியா துறைவாயாகவென அழிந்துகூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்"
(தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
| ஒன்றில் காலை அன்றில் போலப் |
| புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை |
| யானும்ஆற் றேனது தானும்வந் தன்று |
| நீங்கல் வாழியர் ஐய ஈங்கை |
5 | முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர் |
| நௌவி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி |
| உருக்குறு கொள்கலங் கடுப்ப விருப்புறத் |
| தெண்ணீர்க் குமிழி இழிதருந் |
| தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே. |
(சொ - ள்.) ஒன்று இல் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை - ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை; யானும் ஆற்றேன் - யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; ஈங்கை முகை