| இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை |
| கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி |
| நல்லரா நடுங்க உரறிக் கொல்லன் |
| ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த்து அகழும் |
5 | நடுநாள் வருதல் அஞ்சுதும் யாமென |
| வரைந்துவரல் இரக்குவம் ஆயின் நம்மலை |
| நன்னாள் வதுவை கூடி நீடின்று |
| நம்மொடு செல்வர்மன் தோழி மெல்ல |
| வேங்கைக் கண்ணியர் எருதெறி களமர் |
10 | நிலங்கண்டு அன்ன அகன்கண் பாசறை |
| மென்தினை நெடும்போர் புரிமார் |
| துஞ்சுகளிறு எடுப்புந்தம் பெருங்கல் நாட்டே. |