பக்கம் எண் :


217


நீடின்று வரைந்து மெல்லச் செல்வரென்றது, நின்துயர்தீர இன்னே மணம்புரிந்து சின்னாளளவும் நின்னைப் பன்முறை முயங்கிய பின்பு செல்வரென்றதாம்.

    உள்ளுறை :- தினைக்கதிரடிக்கவெண்ணி யுறங்குகின்ற குறவரை யானை யெழுப்புமென்றது, வரைந்துகொள்வோமென்று கருதியுறையுந் தலைமகனை யாம் விரைந்து வரைவாயாகவென்று இரப்போமென்றதாம்.

     இறைச்சி :- கரடி இரையுண்ணுமாறு புற்றிலேகிடந்த பாம்பு நடுங்கும்படி அகழ்ந்துண்ணு மென்றது, அங்ஙன மணம்புரியுந் தலைவர் நம்மை முயங்குகையில் நம்பா லுண்டாய்க் கிடந்த பசலை நடுங்கி யொழிய இனிது புணர்ந்து நலுனுகர்வ ரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) வேங்கைக் கண்ணியர் அறையின்கண் மென்தினை நெடும் போர் புரிமார் இரவின்கண் துயில்கின்ற களிறுகளை எழுப்பா நின்ற கல்நாடு எனலே நேரிய உரையாம். கண்ணியர் எழுவாய். களிறு செயப்படுபொருள். குறவர் தினைக்கதிர்களைத் துவைத்தற்கு யானைகளைப் பிணைத்துத் துவைப்பர் என அவர் திருவுடைமையைச் சிறப்பித்தபடியாம் என்க. உள்ளுறையும் இதற்கேற்பக் கொள்க. களமர் எருதெறி நலம்போன்ற பாசறை என்க.

(125)
  
     திணை : பாலை.

     துறை : இது, பொருள்வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவழுங்கியது.

     (து - ம்.) என்பது, "ஒன்றாத் தமரினும்" என்ற (தொல். பொரு. 41) சூத்திரத்துக் கூறப்பட்ட 'உடைமைய துயர்ச்சி' கருதிப் பொருள் சேர்த்தற்பொருட்டுப் பிரிய வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கி மற்றும் அதன்கண்ணே கூறப்பட்ட பொருள் செயல்வகைப் பாலவாகிய 'நாளதுசின்மையும், அன்பினதகலமும்' இன்பத்தின்பாலவாகிய 'இளமைய தருமையும் அகற்சிய தருமையும், பிறவுங்' கூறி வருந்திச் செலவழுங்கா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
பைங்காய் நல்லிடம் ஒரீஇய செங்காய்க்  
    
கருங்களி ஈந்தின் வெண்புறக் களரி  
    
இடுநீறு ஆடிய கடுநடை ஒருத்தல் 
    
ஆட்பெறல் நசைஇ நாட்சுரம் விலங்கித் 
5
துனைதரும் வம்பலர்க் காணாது அச்சினம் 
    
பனைக்கான்று ஆறும் பாழ்நாட்டு அத்தம் 
    
இறந்துசெய் பொருளும் இன்பந் தருமெனின் 
    
இளமையின் சிறந்த வளமையும் இல்லை