பக்கம் எண் :


228


மறவாமையால் நுமது உள்ளத்தே உள்ளேமன்றோ? அதனால் இவள் தோள் நெகிழ்ந்து வேறுபட்டில; அவ் வேறுபடாமையை யான் ஆற்றினேன் என்பது மிகையன்றோ?; எ - று.

     (வி - ம்.) மறத்தல் நுமக்கு என்பதன் உருபுபிரித்து மாறிக் கூட்டுக. ஆதலின் என்பது முதற்குறிப்பெச்சம். ஏனைய இசையெச்சம். இசையெச்சமாவது இரண்டு முதலிய சொற்கள் எஞ்சி நிற்கப்பெறுவது.

     நும்மையின்றி விளையாட்டயர்தல் முதலாயின செய்திலேமெனவும், நும்மைக் கருதியிருந்த நெஞ்சினேமெனவும், ஊடலிலேமெனவுங் கூறியதனால் நும்மையே நினைந்திருந்தேமென்றும் அங்ஙனம் நீயிருங் கருதியிருந்ததனால், ஒருவரையொருவர் பிரிந்திலிரென்றுங் கூறி உள்ளுறையாலும் புலப்படுத்தி மகிழ்வித்தாள்.

     உள்ளுறை :-:- தாழையின் தோட்டின்மீது இறவு ஆர்ந்த குருகு இறைகொள இருக்குமென்றது, எம் தலைவி மனமகிழ்ந்து தழையும்படி அவளுள்ளத்தில் செல்வம் நிரம்பிய நீயிர் வீற்றிருக்கின்றீ ரென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

     (பெரு - ரை.) ஆடிய, அல்கிய என்பன செய்யிய என்னும் வாய்பாட்டெச்சங்கள். அவை உடையமோ என்னும் குறிப்பு வினை கொண்டன. குருகு இருக்கும் பொறையாறு, பெரியன் பொறையாறு எனத் தனித் தனி கூட்டுக. பொறையாறு தஞ்சை மாவட்டத்துக் கீழைக் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினம்.

(131)
  
திணை : நெய்தல்.

துறை : இது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, இற்செறிக்கப்பட்ட தலைமகள் காவன் மிகுதியாலே தலைவனை அடையமுடியாமையைக் கருதிய தோழி, தலைவி கூறியதுபோலக் கூறுவாளாய்த் தலைவியை நோக்கி 'ஊருந் துயிலா நின்றது; யாருமில்லை; இக்காலத்து அவரை அடையப்பெறாதபடி இற்செறிப்புற்று அயலிலுங் காவலுடையதாகியதன்றி ஊர்க்காவலர் மணியும் ஒலியாநிற்குமாதலின், யான் பொன்றுநாள் இன்றுதானோ' வென அழுங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குக், "காப்பின் கடுமை கையுற வரினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
பேரூர் துஞ்சும் யாரும் இல்லைத் 
    
திருந்துவாய்ச் சுறவம் நீர்கான்று ஒய்யெனப் 
    
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண்வளி 
    
போரமை கதவப் புரைதொறும் தூவக்