பக்கம் எண் :


229


5
கூரெயிற்று எகினம் நடுங்கும் நன்னகர்ப 
    
பயில்பட நிவந்த பல்பூஞ் சேக்கை 
    
அயலும் மாண்சிறை யதுவே அதன்றலைக 
    
காப்புடை வாயில் போற்றோ என்னும் 
    
யாமங் கொள்பவர் நெடுநா ஒண்மணி 
10
ஒன்றெறி பாணியின் இரட்டும் 
    
இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளே. 

     (சொ - ள்.) பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லை - பெரிய இவ்வூரின்கணுள்ளார் யாருந் துயிலாநிற்பர், விழித்தியங்குபவர் ஒருவரும் இல்லை; திருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப் பெருந்தெரு உதிர் தரும் - இக்காலத்து நாம் அவரை யடையப் பெறாதபடி திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குதலால் அந் நீர் விரைவிலே பெரிய தெருவின்கண் உதிர்கின்ற; பெயல் உறு தண் வளி போர் அமை கதவப் புரைதொறும் தூவ - மழையாக அம் மழையோடு பொருந்திய தண்ணிய காற்று தம்மின் ஒன்றோடொன்று பொருந்துதலமைந்த வாயிற்கதவிலுள்ள துளைகள்தோறும் அந் நீரைக் கொணர்ந்து தூவாநிற்ப; கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர் - அத் தூவலாலே கூரிய பற்களையுடைய நாய்கள் நடுங்குகின்ற இவ்விராப்பொழுதில் நல்ல மாளிகையின்கண்ணே; பயில் பட நிவந்த பல் பூஞ்சேக்கை அயலும் - துயிலுமாறு உயர்ந்த பலவாய மலர்களாலமைந்த படுக்கையின் பக்கத்திலும்; மாண் சிறையது - மாட்சிமைப்பட்ட சிறைப்படுத்திய காவலையுடைத்தாயிராநின்றது; அதன்தலை காப்பு உடைவாயில் போற்று 'ஓ' என்னும் - அதன் மேலும் 'காவலையுடைய தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ!' என்று கூறாநின்ற; யாமம் கொள்பவர் நெடுநா ஒள்மணி ஒன்று எறி பாணியின் இரட்டும் - யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலரின் நெடிய நா அமைந்த ஒள்ளிய மணி ஒன்றுகின்ற தாளத்தில் மோதி எழுப்பும் ஒலி போல ஒலியாநிற்கும்; அளியேன் பொன்றும் நாள் இன்றுகொல் - ஆதலின் யாவராலும் இரங்கத்தகுந்த யான் இறந்தொழியும் நாள் இன்று தானோ? எ - று.

     (வி - ம்.) காலுதல் - கக்குதல். எகினம் - நாய். நகர் - வீடு. பாணி - தாளம்.

    புரைதொறுந் தூவுகின்ற நீர்த்துளி தன் சேக்கையில் வீசுவது கண்டு அதனால் நடுங்குவதனை முதலிலே கூறினாள். அதனினின் றுய்யுமாறு முயங்கவரும் காதலனைத் தடுக்குமேயென்பாள், நாய் நடுங்கி