பக்கம் எண் :


230


விழித்திருப்பதனைக் குறிப்பித்தாள். அவன் வரினும் தான் புறம்போகாவாறு தன்னைக் காக்கும் உட்காவலி னிலைமை கூறுவாள், அயலும் சிறையதுவே யென்றாள். உட்காவலுறங்கும்வழிப் புறஞ்செல்ல நினைப்பினும் அதற்கியலாதவாறு மணியிரட்டி ஊரெழுப்புவதனைக் கூறினாள். வேறு தோன்றாமையின் இனித் தானிறந்துபடுநாள் இதுவேயாமென் றிரங்கிக் கூறினாள். இது - துன்பத்துப் புலம்பல். மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.

     (பெரு - ரை.) கடலின்கண் திருந்துவாய்ச் சுறவம் நீர் காலுதலாலே அவ்வொலி ஒய்யென முழங்காநிற்பவும் பெருந்தெரு உதிர்தரு பெயலுறு வளி தூவாநிற்பவும் எனத் தனித்தனியே கோடல் நேரிதாம். பயில் படை நிவந்த என்றும் பாடம். படை ஒன்றன்மேல் ஒன்றாகப் படுத்த மெத்தைகள் என்க. இச் செய்யுளைத் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்குக் கூறுவாளாய்க் கூறி வரைவு கடாவியது எனக் கோடலுமாம்.

(132)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது வரைவிடைவைத்துப் பிரிவாற்றாளாய தலைவி வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் மணம்புரியவேண்டிப் பொருளீட்டுதற்குப் பிரிந்து சென்று நீட்டித்தலும் அதனையாற்றாது தலைவி வருந்துவது கண்ட தோழி அவர் விரையவருவாராதலின் நீ வருந்தாதே யென்றாளை நோக்கி நீ கூறுகின்ற மொழியினால், என்னெஞ்சின் கணெழுந்த காமத்தீயானது சிறிது தணிவதுண்டுபோலுமென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

    
தோளே தொடிகொட்பு ஆனா கண்ணே  
    
வாளீர் வடியின் வடிவிழந் தனவே  
    
நுதலும் 1 பசலை பாயின்று திதலைச்  
    
சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல்  
5
மணியேர் ஐம்பால் மாயோட் கென்று  
    
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற  
    
நாமுறு துயரஞ் செய்யலர் என்னும்  
    
காமுறு தோழி காதலம் கிளவி  
    
இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த  
10
தோய்மடற் சின்னீர் போல  
    
நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே.
 (பாடம்) 1. 
பசலையாகின்று.