பக்கம் எண் :


233


வார்த்தையாடுவே னாயினேன்; தலைப்படுதும் என்பது இது கொல் இனிதின் இனிது - ஆதலின் இனித் தினைக்கொல்லையிலே சென்று காதலனைக் கூடியிருப்பாம் என்பதற்கு அறிகுறி இதுதானோ! இங்ஙனம் நிகழ்ந்த இஃது இனிய வொரு பொருளினுங்காட்டில் இனியதாயிராநின்றது; எ - று.

    (வி - ம்.) தலைப்படுதல் - சென்று அடைதல். வாழியர்: அசை - பாசு. கிளி: பண்பாகுபெயர். தட்டை மூங்கிற் பிளாச்சைச் சிறிது பிளந்து அப் பிளப்பிலே சிறு கல்லைவைத்துச் சுழற்றிவீசுங் கருவி: ஒலி படப் புடைக்குங் கருவியுமாம். புனத்திலே சென்று அடைதுமெனவே அங்குக் காதலரைக் கூடுதல் திண்ணமென்பதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) இனி இச் செய்யுள், தன்னை இற்செறிப்பர் என அஞ்சி வருந்திய தலைவியைத் தோழி பெருமகளே வருந்தற்க: யாம் இன்னும் அவனை இனிதின் இனிது தலைப்படுவங்காண் என்று ஆற்றினாளைத் தலைவி அங்ஙனம் நீ கூறுதற்கு ஏது என்னை என வினவினளாக அதற்குக் காரணம் கூறும் தோழி யாயும் அவணையாகென ஏயள்மன்; நுந்தையும் செல்லாயோ உண்கு என இனிய கூறினன், யான் ஒல்லேன் போல உரையாடுவல், இது யான் இனிதின் இனிது தலைப்படுதும் என்பதற்குக் காரணம் என்று ஆற்றினள் என்று நுண்ணிதின் உரை காண்டல் நன்று. இதுகொல் என்புழி, கொல் அசைச் சொல் என்க. இங்ஙனம் கூறாது தோழி "காதலனைக் கூடியிருப்பாமென்பதற்கு அறிகுறி இதுதானோ?" என்று வினவினாளாகக் கோடல் பொருந்தாமையும் உணர்க.

(134)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, வரைவுநீட்டிப்ப அலராமெனக் கவன்ற தோழி, சிறைப்புறமாகச் சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைவன் வரையாது நீட்டித்தலானே ஊரார் பழிதூற்றுவர் என்பதறிந்த தோழி சிறைப்புறத்தானாகிய அவன் கேட்டு வரையுமாற்றானே தலைவர் நம்மொடு நகைப்ப அவரது நகையை மெய்யெனக்கொண்டு கூடி இப்பொழுது அவர் அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது. அங்ஙனம் அவர் நகுவதன்முன் சீறூரினியதாயிருந்ததென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்' (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை 
    
மாவரை புதைத்த மணன்மலி முன்றில் 
    
வரையாத் தாரம் வருவிருந்து அயருந் 
    
தண்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர்