பக்கம் எண் :


24


செலவழுங்கி நின்றானை நீ வரைந்து புகுதக; நினக்கு வரைவு மாட்சிமைப்படுமென்றலின் கேட்ட தலைவன் இவள் அறத்தொடு நிற்றலான் மாட்சிமைப்பட்டது போலுமெனப் பிற்றைஞான்று வரைவொடு புகுவானாவது இது "வெளிப்பட்ட பின்றையு முரிய கிளவி" (இறையனார்- 23) என்றதனாற் பெறப்பட்டது. தோழி சென்று அறத்தொடு நிற்றலை, "காமற் கடும்புனல்" (கலி. 39) என்ற செய்யுளின் 'சாய்த்தார்தலை' என்றதன்காறுங் கண்டு கொள்க. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல். இதனைப் போக்குதல் தவிர்ந்ததற்கு மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொல்-பொ- 39 உரை.)

    (பெரு - ரை.) ) நன்கு பதமறிந்து பாலைக் காய்ச்சிப் பிரையிட்டுத் தோய்த்த தயிர்த்தாழி இயல்பாகவே விளம்பழம் போன்று மணங்கமழும் என்பது பற்றி விளம்பழம் கமழும் குழிசி என்றார். பதனறிந்து தோய்ந்த தயிர்த் தாழி முடை நாறுதலின்று ஆகலின் விளம்பழம் கமழும் என்பதற்கு விளம்பழம் போன்று இனிதாக மணங்கமழும் குழிசி என்னலே அமைவுடைத்து, இயக்கம் முழங்கும் என்க. கமம் - நிறைவு. "கமம் நிறைந்தியலும்" என்பது தொல்காப்பியம். தயிர்த் தாழி சூற்கொண்ட வயிறு போலப் பருத்திருத்தல் பற்றிச் சூற்குழிசி என்றார். தன் வரைத்தன்றியும் என்றதற்கு அவள் வரைத்தன்றியும் எனப் பொருள் கோடல் சிறப்பு.

(12)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இஃது, இயற்கைப் புணர்ச்சியின் பிற்றைஞான்று தலைவியின் வேறுபாடுகண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த மறுநாள் தலைவியின் கண் சிவப்பு முதலாய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு ஏற்றினான் ஆயிற்றென்று வினாவிய தோழிக்கு மறைத்துக் கூறுதலானே அவள் தினைக்கதிரைக் கிளிகள் கொய்துகொண்டு போகவும் அவற்றை ஓட்ட நீ எழுந்தாயுமில்லை. இனி அழாதேனு மிருவெனக் கூறுவாள் போன்று இறைச்சியால் அவளது களவொழுக்கத்தைத் தான் அறிந்து வைத்தேனெனப் பொருள் கொள்ளுமாறு தானுமறைத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

    
எழா அ யாகலி னெழில்நலந் தொலைய 
    
அழா அ தீமோ நொதுமலர் தலையே 
    
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த 
    
பகழி யன்ன சேயரி மழைக்கண் 
5
இன்கடுங்1நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்