பக்கம் எண் :


241


ஆதாரமாக யாவருந் தொழுமாறு ஆங்காங்குள்ள நிலைநின்ற பலவாகிய குன்றின் கொடுமுடிகள் தோறும்; ஏயினை உரை இயர் - பொருந்தி உலாவுவாயாக; எ - று.

    (வி - ம்.) வணர்தல் - நுனி சுருண்டிருத்தல். உரைஇயர் : வியங்கோள்; உலாவுக என்னும் பொருளது. படுமலைப்பாலை - பெரும்பாலை ஏழனுள் ஒரு பண்; அது செம்பாலையுட்பட்ட குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் "கைக்கிளை, உழை, விளரி், தாரம்" இவைகளுக்கு ஒரோவொன்றைக்கொண்டு சேர்க்கத் துத்தங்குரலாய்ப் படுமலைப் பாலையாகும்; இக்காலத்து அருகிய வழக்காதலின் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

    மழையாலே குளிர்ப்புள் ளூறுதலானே அணைத்துக்கிடந்தனன் ஆதலின், மழைபொழிந்த வுதவியோ யென்றான்; உதவிபெற்றார் வாழ்த்துதல் இயல்பு. உயர்ந்த தவிசினிருந்தாலே பலரும் காண இயையு மாதலின் யாவரும் யாண்டையும் நின்னை நோக்கித் தொழுமாறு குன்றின் கண்ணுள்ள கோடுதோறும் உலாவுதி யென்றான். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவியி னின்பந்துய்த்து மகிழ்ந்திருத்தல்.

    (பெரு - ரை.) "உரைஇயர்" என்பது இப்பொருட்டாதல் "கடுங்காற்றெடுப்பக் கல்பொருது உரைஇ" எனவரும் மதுரைக் காஞ்சியினுங் (378) காண்க. உலகிற்கு ஆணியாக என்பதனைக் குன்றிற்கே அடையாக்கினுமாம். என்னை? மலைகளாலேயே உலகு நிலைபெறுகின்றது என்பவாகலின். இக்காரணத்தால் மலைகட்கு வடமொழியில் பூதரம் என்னும் பெயருண்மையும் உணர்க. எழிலி! உறையினையாய் இமிரும் உதவியோய் என இசைப்பினுமாம்.

(139)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, குறைமறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.

    (து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே தோழிபால் தன்குறை கூறலும், அவள் மறுத்தனளாக, அதுபொறாத தலைமகன் மீண்டும் அவள் கேட்டுத் தன் குறைமுடிக்கு மாற்றானே தன் நெஞ்சை நோக்கி 'நெஞ்சமே பந்துவிளையாடி யேகுமவள் நமக்கு அருள் செய்யினும் அருளாது விடினும் நீ முனியாதே கொள;் யானுற்ற நோய்க்கு அவளன்றிப் பிறிதொரு மருந்து இல்லை'யென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "தண்டாது இரப்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

    
கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த 
    
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் 
    
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் 
    
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்