(து - ம்.) என்பது , அறத்தொடு நிற்றலின்கண் முதலிலே தலைவன் பிரிந்தமை காரணமாகத் தலைவி தன்னைத் தலைவன் இகந்தானென வருந்திப் புலம்பக் கேட்ட தோழி, அவளை ஆற்றுவிக்க வேண்டித் தலைவன் நம்மைக் கைவிட்டனனாதலின் அவனியல்பு தவறுடைத்தென்று பழித்துக் கூறலும் அதுகேட்ட தலைவி அவர் நம்மைக் கைவிட்டுக் காட்டகத்துச் சென்றிருந்தனராயினும் குறித்த பருவத்து வந்து கூடித் தலையளி செய்வரென்று அவனது நல்ல இயல்புகளைப் பொருந்தக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவற் காண்டல்" (தொல்-கள- 20) என்னும் நூற்பாவின்கண் "வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்" என்னும் விதிகொள்க.
| தொல்கவின்1 தொலையத் தோள்நலஞ் சாஅய் |
| நல்கார் நீத்தன ராயினு நல்குவர் |
| நட்டனர் வாழி தோழி குட்டுவன் |
| அகப்பா அழிய2 நூறிச் செம்பியன் |
5 | பகல்தீ வேட்ட ஞாட்பினு மிகப்பெரி |
| தலரெழச் சென்றனராயினு மலர்கவிழ்ந்து |
| மாமட லவிழ்ந்த காந்தளஞ் சாரலின் |
| ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் |
| துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல் |
10 | நெடுவரை விடரகத் தியம்புங் |
| கடுமான் புல்லிய காடிறந் தோரே. |
(பாடம்) 1. | தொலைந்து. 2. | நூறியருமிளை. | |