(து - ம்.) என்பது, தலைமகன் இரவுக்குறி வருதலானே ஏதப் பாடுண்டாமாதலின் அதனை விலக்கி மணம்புரிந்து கொள்ளுமாறு கூறக்கருதிய தோழி, தலைவனை நெருங்கி 'நாடனே, இவளுயிர் வருந்தும் வண்ணம் இரவிலே நீ இங்கு வருதல் பண்புடையதன்றுகா'ணென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.