பக்கம் எண் :


296


ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒரு வேற்கு ஓடி ஆங்கு - ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல; நம் பன்மையது எவன் - பலர் கூடிய நம்முடைய கூட்டமும் ஒழியவேண்டியதன்றி வேறுயாது பயன்படுங்கண்டீர்? எ - று.

    (வி - ம்.)விறலி - விறல்படப் பாடியாடும் மகள்; விறல் - சத்துவம். சேர் - திரட்சி; உரிச்சொல். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்.

    (பெரு - ரை.) இனி, ஆரியர் துவன்றிய முள்ளூரின் போர்ப் பறந்தலையிலே அவ் வாரியர் பலரும் ஒருங்கே உருவிய வாட்படைகள் அனைத்தும் பேரிசை மலையனது ஒரோவொரு வேற்படைக்கு ஆற்றாது இரிந் தோடினாற் போன்று யாமும் இவள் ஒருத்திக்குப் புறங்கொடுத்தோடவேண்டியதுதான், நமது பன்மையாற் பயன் யாது? என்று பொருள்கோடலே சிறப்பாதலுணர்க. 'இவள் வன்மை தலைப்படினே' என்றும் பாடமுண்டு. காக்கம் - காப்பேம்.

(170)
  
171. . . . . . . . . . . . . . . .
திணை : பாலை.

துறை : இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகட் குரைத்தது.

    (து - ம்.) என்பது, தலைமகனாலே பிரிவறிவுறுத்தப்பட்ட தோழி தலைமகளை நோக்கி 'நம் காதலன் வினைவயிற் பிரிகின்றான் நம்மைக் கைவிட்டுச் சுரத்தின்கண்ணே சென்றக்கால் முன்பு அவனது மார்பிலே கிடந்து துயிலுங் கண்கள் இனி வேறெவ்வாறு உறங்கவல்லன் கொல்'லென அழுங்கிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) நூற்பாவின்கண் "பிறவும் வகைபடவந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.

    
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை 
    
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் 
    
நிலஞ்செலச் செல்லாக் கயந்தலைக் குழவி 
    
சேரியம் பெண்டிர் நெஞ்சத்து எறிய 
5
ஊரான் கன்றொடு புகுதும் நாடன் 
    
பன்மலை அருஞ்சுரம் இறப்பின் நம்விட்டு 
    
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர் 
    
வினைப்பூண் தெண்மணி வீழ்ந்தன நிகர்ப்பக்