(து - ம்.) என்பது, குறையுறவறிந்த தோழி "இவனொரு குறையுடையான் போலும்" என ஆராய்ந்துணர நிற்குமிடத்துத் தலைமகன் தனது நெஞ்சம் குறை முடித்தல் வேண்டுமென்று முடிக்கக்கருதலும் அதனை நோக்கி நெஞ்சமே, கிடைத்தற்கரிய குறுமகள் இன்னகைக்கு மகிழ்ந்தோய், எஞ்ஞான்றும் கிடைக்கப்படாத பொருளை விரும்பியதனால் நீ இவ்வண்ணமே துன்பமெய்தி நெடுங்காலம் வாழ்ந்தொழிவாயாக"வென்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, ""தோழி குறை அவட்சார்த்தி மெய்யுறக் கூறலும்"" (தொல். கள. 11) என்னும் விதிக்கொள்க.
துறை : (2) அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம்.