(து - ம்.) என்பது, வரையாது களவின்வழி வந்தொழுகுந் தலைமகன் ஒருகால் ஒரு சார்பின்கண்ணே வந்துறைதலை யறிந்த தோழி, தலைவியை இல்வயிற்செறிப்பாரென்பதை அறிவுறுத்த வேண்டி நேற்றொரு தேர் வந்ததெனப் பழிச்சொலுண்டாயதன்றி அன்னையும் என்னைக் குறிப்பாக நோக்கினள்; நான் இயங்காதிருப்பின் யான் கொண்ட அழகினுண்மை இத்தகைய இயல்பினதேயென்று காட்டுவதரியதாகும்; அவர்வந்து வறிதேபோதல் அதனினும் அரிய துன்பமுடையதாகுமென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| சிறுவீ ஞாழல் தேன்தோய் ஒள்ளிணர் |
| நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த |
| வண்டற் பாவை வனமுலை முற்றத்து |
| ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅங் |
5 | கண்டல் வேலிக் காமர் சிறுகுடி |