பக்கம் எண் :


330


தலைவியின்; சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோய் - சிலவாய் மொழியையுடைய சிவந்த வாயினின்றெழுகின்ற நகைக்கு மகிழ்ந்தோய்; இனி நோ - அங்ஙனம் மகிழ்ந்ததனாலே பின்பு கிடைக்கப் பெறாயாய் இனி நீ துன்புறுவாய் காண்; வாழிய - அவ்வகையாகிய துன்பத்துடனே நெடுங்காலம் வாழ்வாயாக; எ - று.

    (வி - ம்.) சேந்தன் தந்தையாகிய அழிசியின் ஆர்க்காடன்ன குறுமகளெனக் கூட்டுக. வாழிய: இகழச்சிக் குறிப்பு. பலவாய அரணங்கடந்த அழிசியின் "ஆர்க்காடு" என்னும் ஊரின்கணுள்ள கழனி, பகைவர் நெருங்குதற்கு அரிதாதல் போல யாம் நெருங்குதற்கு அரியளாயினாளென்றவாறு. இது துன்பத்துப்புலம்பல். மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - தன்னுளத்தழுந்தல். ஏனைத் துறைகளுக்கும் மெய்ப்பாடு பயன் ஏற்றபெற்றிகொள்க.

    (பெரு - ரை.) பொருளீட்டுதற் பொருட்டு முன்னர்த் தன்னை ஊக்கிப் பிரிவு சூழ்ந்த நெஞ்சம் உறுதியுடனில்லாமல் சுரத்திடையே தலைவியின் புன்முறுவலை நினைந்து மயங்குதலான் அதனை வைபவன் இனி நின்னை மீள விடேன்; நீ இங்ஙனமே நொந்து கிடக்கக் கடவை என்று ஒறுத்தபடியாம் என்க. (துறை - 3)

(190)
    திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி தலைமகன் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, வரையாது களவின்வழி வந்தொழுகுந் தலைமகன் ஒருகால் ஒரு சார்பின்கண்ணே வந்துறைதலை யறிந்த தோழி, தலைவியை இல்வயிற்செறிப்பாரென்பதை அறிவுறுத்த வேண்டி நேற்றொரு தேர் வந்ததெனப் பழிச்சொலுண்டாயதன்றி அன்னையும் என்னைக் குறிப்பாக நோக்கினள்; நான் இயங்காதிருப்பின் யான் கொண்ட அழகினுண்மை இத்தகைய இயல்பினதேயென்று காட்டுவதரியதாகும்; அவர்வந்து வறிதேபோதல் அதனினும் அரிய துன்பமுடையதாகுமென நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
சிறுவீ ஞாழல் தேன்தோய் ஒள்ளிணர் 
    
நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த 
    
வண்டற் பாவை வனமுலை முற்றத்து  
    
ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅங்  
5
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி