(து - ம்.) என்பது, தலைவன் பொருள்வயிற்பிரிதலாலே குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவி வாடையை நோக்கி வாடையே யாம் நினக்குத் தீது கருதகில்லேம்; காதலரைப் பிரிந்து தனியே வருந்துகின்ற எம்மை வருத்தாதே கொள்ளென இரந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை ""அவனறிவு ஆற்ற "" (தொல். கற். 6) என்னும் நூற்பாவின்கண், "" பல்வேறுநிலை"" என்பதனாலமைத்துக் கொள்க.
| அட்டரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கை |
| துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ |
| நிறைநீர்ப் புனிற்றுப் புலந்துழைஇ ஆனாய் |
| இரும்புறந் தழூஉம் பெருந்தண் வாடை |
5 | நினக்குத் தீதறிந் தன்றோ இலமே |
| பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தஎங் காதலர் |
| அருஞ்ெ்சயல் பொருட்பிணிப் பிரிந்தன ராக |
| யாருமில் ஒருசிறை யிருந்து |
| பேரஞர் உறுவியை வருத்தா தீமே. |
(சொ - ள்.) அட்ட அரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கை துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ - உருக்கிய அரக்குப் போன்ற சிவந்த வட்டமாகிய முகையையுடைய ஈங்கையினது பஞ்சு போன்ற தலையையுடைய புதிய மலரின் தேன்துளி நின்பாற் கலப்ப; நிறைநீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ - அத் தேன் துளியுடனே புதுவதாக மழை பெய்து நிறைந்த நீர்ததும்பும் புலங்களுட் புகுந்து அவற்றை அளைந்தும்; ஆனாய் - அங்குத் தங்காமல்; இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை - எமது பெரிய அயற்பக்கமெங்கும் சூழ்ந்து வந்து மோதுகின்ற பெரிய குளிர்ச்சியையுடைய வாடையே!; நினக்குத் தீது அறிந்தன்றோ இலம் - யாம் ஒருபொழுதும் எம் நெஞ்சினுள்ளே நினக்குத் தீதாகிய செயலைக் கருதி யறிந்ததுமில்லையே! அங்ஙனமாக; பணைத்தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் அருஞ் செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக - எம்முடைய பருத்த தோளிலேற்றிய ஒளியையுடைய வளை நெகிழும்படி செய்த எம் காதலர்