பக்கம் எண் :


335


தாம் ஈட்டுதற்கரிய பொருளீட்டுமாறு உள்ளம் பிணித்தல் காரணமாக அகன்றனராதலினால்; யாரும் இல் ஒருசிறையிருந்து பேர் அஞர் உறுவியை வருத்தாதீம் - உசாவுந்துணை யாருமில்லாது ஒருபுறத்திருந்து பெரிய துன்பமுறுவேமாகிய எம்மை வருத்தாதே கொள்!; எ - று.

     (வி - ம்.) உறுவி: தன்னைப் படர்க்கையாகக் கூறிய இடவழுவமைதி. துளி கலப்பப் புலந்தழீஇய வாடை - இயற்கையாகத் தனக்குரிய தட்பமுமன்றிச் செல்கையானுஞ் செய்துகொண்ட வாடை யென்றவாறு. நினக்குத் தீதறியாதேம் என்றதனால் நட்புடையே மென்றாளாயிற்று. நின்னட்பினேமாகிய எம்மை இங்ஙனம் வருத்துவித்தவர் காதலராதலின் எம் காரியமாக அவரைச் சென்று வருத்திக் கூட்டுவிப்பாயாக என்றாளென்பதூஉமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) தான் வாடை முதலியவற்றால் வருந்துதல் கண்டு வைத்தும் தூதுபோக்கித் தலைவனை விரைந்தழைத்தற்கு முயலாது தோழியும் வாளாவிருக்கின்றனள் என்று குறிப்பால் அவளைப் பழிப்பாள் ""யாரும் இல் ஒருசிறை இருந்து பேரஞர் உறுவியை"" என்றாள்.

(1")
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்து வரையாது வந்தொழுகுந் தலைமகன் ஒருகால் மறைந்துவந்து உறைவதனை யறிந்த தோழி தலைவியை இல்வயிற்செறித்தனரென்பதனை அவன் கேட்டு விரைய வரைவொடு வருமாறு தலைவியை நோக்கி நாம் வெற்பனொடு தமியேமாகி விளையாடும்பொழுது தினைக்கதிரை அழிக்காதொழிந்த யானைக்கும் கிளிகட்கும் கைம்மாறு யாது செய்யவல்லாம் இப்பொழுது இல்வயிற்செறித்தமையால் அவை கொள்வனபோலுமென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை ""களனும் பொழுதும்........................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
அம்ம வாழி தோழி கைம்மாறு 
    
யாதுசெய் வாம்கொல் நாமே கயவாய்க் 
    
கன்றுடை மருங்கிற் பிடிபுணர்ந் தியலும்  
    
வலனுயர் மருப்பின் நிலன்ஈர்த் தடக்கை 
5
அண்ணல் யானைக்கு அன்றியும் கல்மிசைத்  
    
தனிநிலை இதணம் புலம்பப் போகி 
  
 (பாடம்) 1. 
மருதைப்பெருமங்கன் இளநாகனார்.