பக்கம் எண் :


337


     (பெரு - ரை.) களிறும் கிளியும் செய்தவுதவி காலத்தாற் செய்தவுதவியும், செய்யாமற் செய்தவுதவியும் பயன் தூக்காது செய்தவுதவியும் ஆகலின் அதற்கு யாம் கைம்மாறு ஆற்றவல்லேமல்லேம் என்பாள் "கைம்மாறு யாது செய்வாம்" என்றாள். இனி ஏதிலவாகிய அஃறிணை யுயிர்களும் உதவி செய்யாநிற்ப உறஉறக் கேண்மை கொண்ட நீ விரைவில் வரைவொடு வந்து எம் பெருமாட்டியை உய்யக்கோடல் வேண்டும் என்பது பொருட்புறத்தே தோன்றிய இறைச்சிப் பொருள் என்க. இவை வற்புறுத்தற்பொருட்டு "அன்புறு தகுந இறைச்சியிற் சுட்டிய" படியாம். ஆசிரியர் பெயர் "மருதைப் பெருமங்கன் இளநாகனார்" என்றும் காணப்படுகின்றது.

(1")
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாயின தோழி, வரைவுகடாயது.

     (து - ம்.) என்பது, தலைமகன் களவுப்புணர்ச்சியிலே நீட்டிப்ப ஆற்றாத தோழி உள்ளுறையால் வரைந்தெய்துமாறு கடாவுவாளாய்க் குறிப்பால் அவனை நோக்கிப் புலம்பனே! நீ விரும்பிய காதலியினுடைய கண்கள் மாறாது கலுழாநிற்கும்; அதனை யான் கண்டிருக்கின்றேனாதலின், நீ அவளை வரைந்து முயங்கியருளினாயல்லை; அங்ஙனம் அருளாமையானது கொடிதுகாணென வெகுண்டு கூறா நிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முற்செய்யுட்கோதிய இலக்கணமே அமையும்.

    
அருளா யாகலோ கொடிதே இருங்கழிக்  
    
குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித்  
    
1 தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும் 
    
மெல்லம் புலம்ப யான்கண் டிசினே 
5
கல்லென் புள்ளின் கானலந் தொண்டி 
    
நெல்லரி தொழுவர் கூர்வா ளுற்றெனப்  
    
பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல் 
    
நீரலைத் தோற்றம் போல 
    
ஈரிய கலுழுநீ நயந்தோள் கண்ணே.  

    (சொ - ள்.) இருங் கழி நீர் நாய்க் குருளை - கரிய கழியின் கணுள்ள நீர்நாயின் குருளை; கொழுமீன் மாந்தித் தில்லையம் பொதும்பில் பள்ளிகொள்ளும் - கொழுவிய மீன்களைப் பிடித்துத் தின்று தில்லை மரப் பொந்துகளிலே பள்ளிகொள்ளா நிற்கும்; மெல்லம் புலம்ப - மெல்லிய கடற்கரையின் தலைவனே!; கல் என்

  
 (பாடம்) 1. 
திதலையம்; தில்லைப்.