(து - ம்.) என்பது, தோழி வினைவயிற்பிரியுந் தலைவனை நோக்கி "நீ இவளைக் கைவிட்டு வினைமேற் செல்லுவையாயின் இவளது மாமையினழகு இன்றோடு போயிற்றுக்கா"ணென அழுங்கிக் கூறாநிற்பதுமாகும்.
(இ - ம்.) இதற்கு, ""பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்,"" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து |
| ஆளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப் |
| பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி |
| ஏந்துவெண் கோட்டு வயக்களிறு இழுக்குந் |
5 | துன்னருங் கானம் என்னாய் நீயே |
| குவளை உண்கண் இவளீண்டு ஒழிய |
| ஆள்வினைக் ககறி யாயின் இன்றொடு |
| போயின்று கொல்லோ தானே படப்பைக் |
| கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் |
10 | நீர்மலி கதழ்பெயல் தலைஇய |
| ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே. |
(சொ - ள்.) அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து நல் ஆளி மான் - நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; வேட்டு எழு கோள் உகிரப் பூம்பொறி உழுவை தொலைச்சிய - இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக் கயிறு இழுக்கும் - கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; துன் அருங்கானம் என்னாய் - பிறர் நெருங்குதற்கரிய