பக்கம் எண் :


355


     திணை : பாலை.

     துறை : (1) இது, தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.

     (து - ம்.) என்பது, வினைவயிற் பிரியுந்தலைவன் ஆற்றானாகித் தன் நெஞ்சை நோக்கி, "நீ துன்னருங்கானமென்னாது இவளை இங்கிருக்குமாறு கைவிட்டு வினைமேற் செல்லுவையாயின், இவளது மாமையினழகு இன்றோடு போயிற்றுக்கா"ணென அழுங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

     துறை : (2) தோழி செலவழுங்கச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, தோழி வினைவயிற்பிரியுந் தலைவனை நோக்கி "நீ இவளைக் கைவிட்டு வினைமேற் செல்லுவையாயின் இவளது மாமையினழகு இன்றோடு போயிற்றுக்கா"ணென அழுங்கிக் கூறாநிற்பதுமாகும்.

     (இ - ம்.) இதற்கு, ""பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்,"" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து  
    
ஆளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப் 
    
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி 
    
ஏந்துவெண் கோட்டு வயக்களிறு இழுக்குந் 
5
துன்னருங் கானம் என்னாய் நீயே 
    
குவளை உண்கண் இவளீண்டு ஒழிய 
    
ஆள்வினைக் ககறி யாயின் இன்றொடு 
    
போயின்று கொல்லோ தானே படப்பைக்  
    
கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் 
10
நீர்மலி கதழ்பெயல் தலைஇய 
    
ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே. 

    (சொ - ள்.) அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து நல் ஆளி மான் - நெஞ்சே! அருவி ஒலிக்கின்ற பெரிய மலைப்பக்கத்தில் நல்ல ஆளி என்னும் விலங்கு; வேட்டு எழு கோள் உகிரப் பூம்பொறி உழுவை தொலைச்சிய - இரை விரும்பி எழுந்த கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரியையுமுடைய புலியாலடிக்கப்ட்ட; வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக் கயிறு இழுக்கும் - கூரிய நுனியையுடைய தலையிலே தாங்கிய வெளிய கோட்டினையுடைய வலிய களிற்றியானையை இரையாகக் கொண்டு இழுத்துச் செல்லாநிற்கும்; துன் அருங்கானம் என்னாய் - பிறர் நெருங்குதற்கரிய