காடென்று நினையாய்; நீயே குவளை உண்கண் இவள்ஈண்டு ஒழிய ஆள்வினைக்கு அகறியாயின் - நீ தான் குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இவ்விடததே நிற்குமாறு கைவிட்டு நின்னுள்ளத்து முயற்சியை மேற்கொண்டு வினையிடத்துச் செல்லுவையாயின; படப்பைக் கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நீர்மலி கதழ் பெயல் தலைஇய ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவின் - கொல்லையிலுள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிரின்மீது நீர்மிக்க விரைவையுடைய மழை பெய்துவிட்ட பொழுதுண்டான அழகிய நிறம் போன்ற இவளது மாமையினழகு; இன்றொடு போயின்று - இன்றோடே போயிற்றுக்காண்; ஆதலின் ஆராய்ந்து நினக்கு ஏற்றது செய்வாயாக! எ - று.
(வி - ம்.) ஆளி - சிங்கத்தின் வேறுபட்டது.
மாமைக்கவின் இனி எய்துவதரிதென்பான், இன்றோடே போயதென இறந்தகாலத்தாற் கூறினான். இதனினும் ஆள்வினை சிறந்த தாயினும் கானின் கொடுமையைக் கருதின் அஃது அத்துணைச் சிறப்பிலதென நெறியின் தருமை கூறி அறிவுறுத்தினானாம்.
இறைச்சி:- புலிதொலைச்சிய களிற்றை ஆளி இரையாக உண்ணக் கருதி யிழுத்துண்ணுங் கானமென்றது, நின்னால் நலனுணப்பட்ட இவளது மேனியழகைப் பசலையுண்டு கெடுக்காநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்கல்.
இரண்டாந்துறைக்கு இவையனைத்துந் தோழி தலைவனை விளித்துக் கூறியதாகக் கொள்ள உரையொக்கும். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை) ஆளிமான் உழுவை தொலைச்சிய களிற்றை இழுக்கும் என இயைபுகாண்க. வைந்நுதி ஏந்து வெண்கோடு என்பதற்கு கூரியநுனி உயர்ந்த வெளிய கோடு எனினுமாம். கவின் இன்றோடு போாயின்று என இயைக்க. கொல், ஓ: அசைகள்.
(205)
திணை : குறிஞ்சி.
துறை : இது, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
(து - ம்.) என்பது, பகற்குறியின்கண்ணே தலைமகன் ஒருபுறத்தில் வந்து அற்றம் நோக்கி மறைந்திருப்பதை யறிந்த தோழி அவன்கேட்டு விரைந்து மணஞ்செய்து கொள்ளுமாற்றானே தலைவியை நோக்கித் "தினை முற்றியதைக் கவருகின்ற கிளியை ஓட்டிக் காப்பாயென்று எந்தை கூறினன்; அப்பொழுது அன்ையைும் வேங்கைமலர்கவென என்