பக்கம் எண் :


357


முகத்தைக் குறிப்பாக நோக்கினளாதலின் நாடனது கேண்மையை அறிந்தனளோ யாதோ தெரிகிலேனே"யென மயங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்.......................ஆங்கதன் றன்மையின் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியினான் அமைத்துக் கொள்க.

    
துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்வார் பிறைஞ்சித் 
    
தோடலைக் கொண்டன ஏனல் என்று 
    
துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச் 
    
செவ்வாய்ப் பாசினங் கவருமின் றவ்வாய்த் 
5
தட்டையும் புடைத்தனை கவணையுந் தொடுக்கென 
    
எந்தைவந் துரைத்தனன் ஆக அன்னையும் 
    
நன்னாள் வேங்கையும் மலர்கமா இனியென  
    
என்முகம் நோக்கினாள் எவன்கொல் தோழி 
    
செல்வாள் என்றுகொல் செறிப்பல் என்றுகொல் 
10
கல்கெழு நாடன் கேண்மை 
    
அறிந்தனள் கொல்லஃது அறிகலேன் யானே. 

    (சொ - ள்.) தோழி துய்த்தலைப் புனிற்று ஏனல் குரல் - தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் வார்பு இறைஞ்சித் தோடு அலைக் கொண்டன என்று - பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; குறுவன - அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல் மீமிசைச் செவ்வாய்ப் பாசு இனம் குழீ இ - துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; கவரும் இன்று அவ் வாய்த் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என - இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து உரைத்தனன் ஆக - எந்தை வந்து கூறினான்; இனி அன்னையும் நல்நாள் வேங்கையும் மலர்க என என்முகம் நோக்கினள் - அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; செல்வாள் என்று கொல் செறிப்பல் என்றுகொல் எவன்கொல் - என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; கல்கெழு நாடன் கேண்மை அறிந்தனள் கொல் - மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய