பக்கம் எண் :


358


கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் - அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்! எ - று.

     (வி - ம்.) பாசினம் - கிளியின் கூட்டம். ஆக: பிரிவிலசைநிலை. இஃது அவன்புணர்வுமறுத்தல். தினைவிளைவு உணவுக்குக் கொண்டு வரப்படும் நாளாகலின் அது நன்னாளெனப்பட்டது.

     வேங்கைமலர்க வென்றது தினை கொய்யுங்காலம் அதுவாதலால் விரைவிலே கொய்யக் கருதி கூறினாளென்பது. அங்ஙனம் கூறுதலால் இனித் தலைவி இற்செறிக்கப்படுவளென்றதாம். காரணமின்றிக் கூற்றுமின்றி நோக்கினமையின் நாடனது கேண்மை அறிந்தனள் கொலென்றாள். வேங்கை மலர்தலை அவன் கேட்குமாற்றானே கூறியது அந்நாள் வதுவை அயர்தற்கு ஏற்றதாதலின் வரைவொடு வருகவென அறிவுறுத்தினாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம் பயன் - வரைவுடன்படுத்தல்.

     (பெரு - ரை.) வேங்கை மலருங்காலமே தினையரியும் காலமாகலின் தந்தை தினைகாக்க ஏவினமை கேட்ட தாய் விரைவில் தினையரியும்படி வேங்கை மலர்க என்று விரும்பிக் கூறினாள், அங்ஙனம் கூறற்குக் காரணம் அவள் நங் களவொழுக்கத்தை யறிந்தமையேயாம்; எனவே அவள் விரைவில் இற்செறிப்பள் என்று குறிப்பான் உணர்த்தியபடியாம்.

(206)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, நொதுமலர் வரைவுழித் தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றது.

     (து - ம்.) என்பது, "தலைவியை வேற்றுமாக்கள் மணஞ்செய்து கொள்ள வேண்டி வருவதனையறிந்த தோழி, தன் தாயாகிய செவிலியிடஞ் சென்று "அன்னாய்! முன்பு களவொழுக்கத்திலே கலந்த கேள்வருடைய தேர் வருவது நிறுத்தப்பட இயலாதது; வந்தவர்தாம் வறிதே பெயர்வரோ? நம் இளமகளை வேற்றுவரைவிற் படுத்தினிரேல் கொலைவெய்ய சிறுவர் கைப்பட்டனளேயா"மென முன்பு நிகழ்ந்த களவொழுக்கத்தை வெளிப்படுத்தித் தெளியக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "முன்னிலை அறன் எனப்படுதல் என்றிரு வகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாலமைத்துக் கொள்க.

    
கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை 
    
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் 
    
கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென 
    
நெடுந்தேர் பண்ணி வரலா னாதே