பக்கம் எண் :


360


     நம்மின் மிக்க செல்வமுடைய காதலரென்பாள் தேரொடும் வருதல் கூறினாள். அத்தகையார் இழிந்த பாக்கத்து வருகின்றனரென இவள்பாற்கொண்ட வேட்கைமிகுதி கூறினாள். பிறர்வரையப் புகுவோர் இழிதக்காரென்பாள் வலையுந்தூண்டிலும் பற்றிய சிறாரெனக் கூறினாள். கொலைவெஞ்சிறார் பாற்பட்ட இவள் உய்யாளென இறந்து பாடு குறித்தாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வெளிப்படையாக அறத்தொடு நிற்றல்.

(207)
  
     திணை: பாலை.

     துறை: இது, செலவுற்றாரது குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்பத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிந்தானது குறிப்பறிந்து தலைமகள் வருந்துதலும் அதுகண்ட தோழி "நீ ஏன் வாடுகின்றனை, அவர் செல்பவரல்லர்: செல்லிற் காமநோய் பொறுப்பவருமல்லர், பொருள் முடியாதாயினும் வருவர்காண்: இம்மழைக் குரல் பிரிந்தோரை நாடித் தருவதுபோலு"மெனத் தேற்றிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.

    
விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி 
    
அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப 
    
விளிவிலா 1 கலுழுங் கண்ணொடு பெரிதழிந்து 
    
எவனினைபு வாடுதி சுடர்நுதற் குறுமகள் 
5
செல்வர் அல்லர் 2 நங்காதலர் செலினும் 
    
நோன்மார் அல்லர் நோயே மற்றவர் 
    
கொன்னு நம்பும் குரையர் தாமே 
    
சிறந்த அன்பினர் சாயலும் உரியர் 
    
பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் 
10
முடியா தாயினும் வருவர் அதன்றலை 
    
இன்றுணைப் பிரிந்தோர் நாடித் 
    
தருவது போலுமிப் பெருமழைக் குரலே. 

    (சொ - ள்.) சுடர் நுதல் குறுமகள் - விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; விறல்சாய் விளங்கு இழை நெகிழ - நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; தெள் மணி போல் அறல் முலையிடை நனைப்ப - முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே

  
 (பாடம்) 1. 
கலிழும்.
 2. 
நுங்காதலர்