(து - ம்.) என்பது, இரந்தோர்க் கீதல் முதலாய காரணத்தானே பொருள்வயிற பிரியுந் தலைமகன் இன்னபருவத்து வருவேனென்றபடி வாராமையாலே அவன் குறித்த பருவம் வரக்கண்ட தலைவி, போதணிய வருவே னென்று சூளுரை கூறியகன்ற நம் தலைவர் தாங்கூறிய பருவத்துக்குரிய இடிமுழக்கத்தைக் கேட்டிலரோவென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "தோழிக் குரியவை.............................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதன்கண் அமைத்துக் கொள்க.