| இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் |
| அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்மென |
| வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை |
| அரும்பவிழ் அலரிச் சுரும்புண் பல்போது |
5 | அணிய வருதுநின் மணியிருங் கதுப்பென |
| எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி |
| மைசூழ் வெற்பின் மலைபல இறந்து |
| செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் |
| கேளார் கொல்லோ தோழி தோள் |
10 | இலங்குவளை நெகிழ்த்த கலங்கஞர் எள்ளி |
| நகுவது போல மின்னி |
| ஆர்ப்பது போலும்இக் கார்ப்பெயல் குரலே. |