| இலங்குவளை மகளிர் வியனகர் அயர |
5 | மீன்நிணந் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் |
| நீல்நிறப் பரப்பின் தயங்குதிரை உதைப்பக் |
| கரைசேர்பு இருந்த கல்லென் பாக்கத்து |
| இன்றுநீ இவணை யாகி எம்மொடு |
| தங்கின் எவனோ தெய்ய செங்கால் |
10 | கொடுமுடி அவ்வலை பரியப் போகிய |
| கோட்சுறாக் குறித்த முன்பொடு |
| வேட்டம் வாயாது எமர்வா ரலரே. |
(சொ - ள்.) குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பிப் பகல் கெழு செல்வன் குடமலை மறைய - சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; புலம்புவந் திறுத்த புண்கண் மாலை - துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கு வளை மகளிர் வியன் நகர் அயர - இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒள் சுடர் - மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக் கரைசேர்பு இருந்த கல் என்னும் பாக்கத்து - நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவணை ஆகி எம்மொடு தங்கின் எவன் - இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ?; செங்கால் கொடுமுடி அவ் வலை பரியப்போகிய கோள் சுறாக் குறித்த முன்பொடு - சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; வேட்டம் வாயாது எமர் வாரலர் - அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்; எ - று.
(வி - ம்.) அயரவென்னு மெச்சம் இருந்த வென்பதனைக் கொண்டது.
தலைவிக்கு வருத்த மிகுதியுண்டா மென்பதனை அறிவுறுத்துவாள் புன்கண்மாலை யென்றாள். தலைவியொடு கூடி நலந்துய்க்க வென்று குறிப்பிப்பாள் எம்மொடு தங்கினெவனோ என்றாள். அச்சமும் கண்