பக்கம் எண் :


373


படையும் இன்றி இரவுமுழுதுந் துய்க்கலாமென்பாள் எமர் வாரலரென்றாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (2) இரவுக்குறி மறுத்து வரைவுகடாதற்கு மணஞ்செய்து கொண்டால் அன்றி வெளிப்படையாகத் தலைவிபால் வைகுதற்கு இயலாதாதலானும், வேட்டம் வாய்ப்பின் எமர் உடனே வருவராதலால் அவர் அறியின் ஏதம் நிகழும் ஆகலானும், மாலை புன்கணுடையதாதலால் நீ தங்காவிடின் தலைவி ஆற்றகிலாளெனக் குறிப்பாற் கூறுதலானும் மணஞ்செய்து கொள்கவெனக் களவுமறுத்து வரைவுகடாயதறிக. மெய்ப்பாடும் பயனும் அவை.

     (பெரு - ரை.) புன்கண்ணைச் செய்கின்ற மாலை என்க. காதலரோடு கூடியிருக்கும் மகளிர் என்பாள் இலங்குவளை மகளிர் என்றாள். அவர் மாலையை மகிழ்ந்து வரவேற்ப இவள்மட்டும் வருந்தியிருப்பதோ என்றிரங்கியபடியாம்.

(215)
  
     திணை : மருதம்.

     துறை : இது, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை பாணற்காயினும் விறலிக்காயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகனாலே தலையளி செய்யப்பட்ட காதற் பரத்தை அவனுக்கு அறிவுறுத்துமாற்றால் அத் தலைவிக்குப் பாங்காயுள்ளோர் கேட்ப முற்கூறிய அவ்விருவரில் ஒருவரைநோக்கி "இன்ப நுகராவிடினும் அவரைக் காணுதல் இனிதேயாம்; அவரில்லாதவூர் இன்னாதாகு"மென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் வரும் "இவற்றொடும் பிறவும்" என்பதனால் அமைத்துக் கொள்க.

    
துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும் 
    
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் 
    
கண்ணுறு விழுமங் கைபோல் உதவி 
    
நம்முறு துயரங் களையா ராயினும் 
5
இன்னா தன்றே அவரில் ஊரே 
    
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்குங் 
    
குறுகார் கழனியின் இதணத்து ஆங்கண் 
    
ஏதி லாளன் கவலை கவற்ற 
    
ஒருமுலை யறுத்த திருமா வுண்ணிக் 
10
கேட்டோ ரனையா ராயினும் 
    
வேட்டோ ரல்லது பிறரின் னாரே.