பக்கம் எண் :


385


கேட்ட தலைவன் வரைந்து எய்துவதன்றி வேறு செய்யக் கிடந்ததின்மையின் வரைவுகடாவாயிற்று.

     உள்ளுறை :- பிடியை மேகம் மறைத்தலாலே அதனைக் காணாது களிறு பிளிறுமென்றது, தலைமகளை இற்செறித்தலானே தலைமகன் குறியிடம் புகுந்து அவளைக் காணாது வருந்தாநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) விடுபுரி முரற்சி என்றும் பாடம். கைபுனைமுரற்சி வாங்கி என மாறுதலுமாம். 'பற்றுவனன்' என்றும் பாடம். பற்றுவனன்: முற்றெச்சம். 'பலவுடன்' என்பதற்குப் பலாமரங்களோடு எனினுமாம். சேண் நெடுங் குன்றம் என்பதற்குத் தொலைவிலுள்ள நெடிய குன்றெனினுமாம்.

(222)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அது மறுத்து வரைவுகடாயது

.
    (து - ம்.) என்பது, அங்ஙனம் வந்துமீளுந் தலைமகனைத் தோழி இவள் நின்பால் அன்புடையளாதலிற் பகலும் வருகின்றனை, இங்கு நீ வந்துபோவதனை எங்கள் ஐயன்மார் அறியின் இல்வயிற் செறிப்பராதலின், இரவில் வருவாயாக என்று கூறினவள் அவ்வண்ணம் நீ இரவில் வருவதற்கும் இவ்வூர் துறையின்கண்ணே இரவிலுந் துயிலாத அம்பற்பெண்டிரையுடையதா யிராநின்றதென அதனையு மறுத்து வரைவு தோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் முன் செய்யுட்குக் கூறிய விதியேயாம்.

    
இவள்தன், காமம் பெருமையிற் காலையென்னாள்நின் 
    
அன்புபெரி துடைமையின் அளித்தல் வேண்டிப 
    
பகலும் வருதி பல்பூங் கானல் 
    
இந்நீ ராகலோ இனிதால் எனின்இவள் 
5
அலரின் அருங்கடிப் படுகுவள் அதனால்  
    
எல்லி வம்மோ மெல்லம் புலம்ப 
    
சுறவினங் கலித்த நிறையிரும் பரப்பின் 
    
துறையினுந் துஞ்சாக் கண்ணர் 
    
பெண்டிரும் உடைத்திவ் வம்பல் ஊரே. 

     (சொ - ள்.) மெல்லம் புலம்ப இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் அன்பு பெரிது உடைமையின் - மெல்லிய நெய்தல் நிலத்தலைவனே இவள் தன்னுடைய காமமிகுதியாலே இது காலைப் பொழுதாமே என்று கருதாளாகி நின்னாலே செய்யப்படும் அன்பைப் பெரிதும் பாராட்டுதல் உடைமையால்;