பக்கம் எண் :


39


நன்றாகப் பறித்து; நாள் இரை கவர மாட்டி - நாட்காலையில் இரையாகிய நாங்கூழைக் கவர்தலும் அதனைக் கொன்று; தன் பெடை நோக்கிய பெருந்தகை நிலை உதுக்காண் - தன் பெடைக்கு ஊட்ட வேண்டி அப் பெடையை நோக்கிய பெருமை தக்கிருக்கின்ற நிலையை உங்கே பாராய்!; நாம் செலற்கு தீண்டா வை முள் தீண்டி ஏமதி - ஆதலின் நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுகாறுந் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!; எ - று.

    (வி - ம்.)பரி-செலவு. உதுக்காண்-உங்கே பாராய். அரிக்குரல் மிடறு - தேரையின் குரல்போன்ற குரலையுடைய மிடறு எனவுமாம். மலிர - விளங்க வெனவுமாம். கெண்டுதல்-பறித்தல். மாட்டல்-அழித்தல். நெய்பால் விதிர்த்தல்: திணைக்கேற்றவுவமை பெயனீர் போகிய புறவென்றதனானே மழைபெய்துவிட்டமை கூறினான். குறித்த பருவத்துத் தாழ்த்தமையின் விரைந்து ஏமதி யென்றான். நாளிரை கொண்டு பெடையை நோக்குதல் காணெனவே அதுபோலப் பொருளீட்டிவரும் யாமும் மனைவியை நோக்கவிரும்புவதும் எனப்பொருள்படுதலால் இது பொருள்வயிற் பிரிவாயிற்று. மெய்ப்பாடு - உவகை. பயன் - கேட்ட பாகன் விரைந்து தேர் கடாவல்.

    (பெரு - ரை.) இதன்கண் கானவாரணம் புறவில் மணல் கெண்டிப் பெற்ற நாங்கூழாகிய நாளிரையைத் தன் பெடையை யூட்டி மகிழ்தற்கு அதனை விரும்பி நோக்கியிருத்தல் போன்று யாமும் வேற்று நாட்டின்கட் சென்று ஊக்கத்தோடு முயன்றீட்டிய நம் பொருளை மனையோடிருந்து அறஞ்செய்து இன்புறுதற்கு இன்றியமையாத் துணையாகிய எங்காதலியைக் காண்டற்குப் பெரிதும் கண்விதுப்புறா நின்றோம் என்பது உள்ளுறை. இப்பொருள் விரைந்து செலுத்தற்குக் குறிப்பேதுவாய் நிற்றல் காண்க.

(21)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவு மலிந்ததோழி, தலைமகட்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, களவொழுக்கந் தவிர்ந்து வரைந்துகொள்ள வேண்டித் தலைமகன் வரக்கண்ட தோழி சென்று தலைவியை நோக்கித் தினைவிளைகாலம் வதுவைக்கேற்ற பொழுதாயினும், வம்பமாரி இடையிலே பெய்வதுகண்டு நீ வருந்த, அப்பொழுது வருவனென்று யான் கூறியமொழி பொய்க்கும்படி அவன் வாரானாயினும், இப்பொழுது மெய்யாகவே மணஞ்செய்துகொள்ள வந்தனனென்று மகிழ்ந்து கூறா நிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க

    
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை  
    
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி