| கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி |
| அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் |
5 | திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி |
| வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் |
| தையூ ணிருக்கையில் தோன்று நாடன் |
| வந்தனன் வாழி தோழி யுலகங் |
| கயங்கண் அற்ற பைதறு காலைப் |
10 | பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
| நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே. |
(சொ - ள்.) தோழி அடுக்கல் கொடிச்சி காக்கும் பைந்தினை -தோழீ! மலைப்பக்கத்திற் கொடிச்சியாற் காக்கப்படும் பசிய தினைப்பயிரில்; முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி - முதலிலே பறிந்து முற்றிய பெருங் கதிர்களைக் கொய்துகொண்ட மந்தி; கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு - பாயுந் தொழிலன்றி்ப் பிற கல்லாத கடுவனொடு நல்லவரை மீதேறி அகங்கை நிறையக் கயக்கித் தூய்மை செய்து; தன் திரை அணல் கொடுங் கவுள் நிறைய முக்கி - தன் திரைத்த அணலையுடைய வளைந்த கவுள் நிறைய வுண்டு; வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தை ஊண் இருக்கையில் தோன்றும் நாடன் - வம்பமாரி பெய்தலாலே நனைந்த புறத்தனவாய் நோன்புடையார் தைத்திங்கட் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போலத் தோன்றா நிற்கும் மலைநாடன்; உலகம் கயங்கண் அற்ற பைது அறுகாலை - உலகத்துக் குளங்கள் எல்லாம் நீர் வற்றி ஈரமற்றகாலை; பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள் என் யாமத்து மழை பொழிந்தாங்கு - சூலொடு வாடிய நெற்பயிருக்கு நடுயாமத்து மழைபெய்தாற்போல; வந்தனன் - வந்தான்; இனி விரைவிலே வதுவை யயர்ந்து நெடுங்காலம் வாழக்கடவதாக!; எ - று.
(வி - ம்.)முற்பட விளைகுரலென்றதனாற் பிற்பட்டு எல்லாக் கதிரும் பறிந்து முற்றுமென்றும் அக்காலமே வதுவை யயர்தற் குரித் தென்றுங் கூறியதாயிற்று. ஞெமிடுதல் - நிமிண்டுதலென இக்காலத்துத் திரிந்து வழங்கப்படுகிறது. அணல்-மோவாய். கயம்- குளம். பைது - ஈரம். பீள்-சூல். நள் - நடு, தையூணிருக்கை-தைத்திங்கட் பிறப்பில் நீராடி அன்று ஆக்கப்படு மாட்சிமைப்பட்ட உணவுண்ண விருத்தல். நோன்பியர் - ஆடி முதலாக மார்கழி யீறாகக் கிடந்த ஆறு திங்களும் தேவர்க்கு இராப்பொழுதெனப் புராணங் கூறுதலுண்மையின், இரவு பிற்றையாமங்கொண்ட சிலபொழுதுண்ணாதிருக்கும் நோன்பியர்.
உள்ளுறை :-தினைக்கதிரைக் கொண்ட மந்தி கடுவனொடு வரையேறி நிறையத் தின்று பெயலினனைந்த புறத்தவாய்த் தோன்று