பக்கம் எண் :


41


மென்றது, மகிழ்ச்சிகொண்ட நீ தலைவனொடு வதுவையயர்ந்து அவனது மனையகம்புக்கு இல்லற நிகழ்த்தி இன்பந் துய்த்துத் துறவறத்தார் முதலாயினோரையும் பேணி மாட்சிமைப்பட்டுக் காட்டுதி யென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் -தலைமகளை மகிழ்வித்தல். இதனை இத் துறைக்கே மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர;் (தொல்-பொருள்-சூ- 114, உரை.)

    (பெரு - ரை.) கையூண் இருக்கையில் என்றும் பாடம். இதற்கு நோன்புடையோர் தங் கையிலேயே உணவை ஏந்தி உண்ணும் இருக்கைபோல என்று பொருள் கூறுக. கண்ணறுதல் என்றது கண்ணோட்டமற என நீர் அற்று வறியவாயிருத்தலைக் குறித்து நின்றதெனினும் ஆம்.

(22)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தலைவியாற்றாமையுணர்ந்த தோழி வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்கத்து நீட்டித்து வரையாதொழுகுதலும் தலைவி அதனை ஆற்றாளாகி வேறுபட அவ்வேறுபாடறியாத தலைமகனைத் தோழி இன்ன இன்ன காரணங்களால் நினக்கு அவ்வேறுபாடு தோன்றவில்லையெனக் கூறி வரைவுகடாவா நிற்பது.

    (இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.

    
தொடிபழி மறைத்தலின் தோளுய்ந் தனவே 
    
வடிக்கொள் கூழை ஆயமோ டாடலின் 
    
இடிப்பு மெய்யதொன் றுடைத்தே கடிக்கொள 
    
அன்னை காக்குந் தொன்னலஞ் சிதையக்  
5
காண்டொறுங் கலுழ்த லன்றியு மீண்டுநீர் 
    
முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறைச் 
    
சிறுபா சடைய செப்பூர் நெய்தல் 
    
தெண்ணீர் மலரின் தொலைந்த 
    
கண்ணே காமங் கரப்பரி யவ்வே. 

    (சொ - ள்.) வடிக்கொள் கூழை தொடிபழி மறைத்தலிடுதோள் உய்ந்தன - வாரி முடித்த கூந்தலையுடைய இவள் தன்னைப் பிறர் கூறும் பழிச்சொற்கஞ்சி வளைகளைக் கழலாதவாறு செறித்து மறைத்தலாலே தோள்கள் வாட்டந் தோன்றாவாயின!; ஆயமோப் ஆடலின் மெய்யது இடிப்பும் ஒன்று உடைத்து - அன்றியும் தன் ஆயத்தாரோடு விளையாட் டயர்தலால் உடம்பிற் களைப்பும் அவ் விளையாட்டினா லுண்டாகியதென நினைப்பதற் குரியதாயிரா