பக்கம் எண் :


392


இளமை நிலையாமையோடு பொருந்தாமையும் முயற்சியான் வரும் வருத்தத்தை உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமையும் உணர்வுடையோர்க்குப் பொருளாசை தகாது என்னும் உணர்ச்சியோடொவ்வாமையும் இன்மையான் வரும் இளிவரவை அது பொருந்தாமையும்; மனவமைதியோ டொவ்வாமையும் சிறந்தார் மாட்டுச் செல்லும் அன்பிற்குப் பொருந்தாமையும் அன்புடையாரைப் பிரிதலருமையைப் பொருந்தாமையுமாகிய பொருளின் இழிதகைமைகளாம். ''சாவவென்மொழி ஈற்றுயிர்மெய் சாதலும் விதி'' (நன்னூல் - 169) என்ப தோத்தாகலான் மரஞ்சாவ, உரஞ்சாவ எனல் வேண்டிய எச்சங்கள் சா என நின்றன.

(226)
  
     திணை : நெய்தல்.

துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுகத் தோழி தலைமகனை வரைவுமுடுகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, மணஞ்செய்துகொள்ளாது களவுப்புணர்ச்சியே, கருதிவந்து ஒழுகுந் தலைமகனைத் தோழி குறியிடத்துச்சென்று தொழுது முன்நின்று நின்னால் அருளிப்பாட்டொடுசெய்த தலையளிதான் பலரானும் அறியப்பட்டு அலராயிற்று, இனி இவள் இறந்துபட்டொழியினும் இப்பொழுது உண்டாகிய பழிச்சொல் நீங்குவதொன்றன்று, இன்னாமையுடையதுகாண் என வரைவுதோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை ''களனும் பொழுதும்.....அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்'' (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.

    
அறிந்தோர் அறனிலர் என்றலர் சிறந்த 
    
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே 
    
புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த 
    
பின்ஈர் ஓதியென் தோழிக்கு அன்னோ 
5
படுமணி யானைப் பசும்பூண் சோழர் 
    
கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் 
    
கள்ளுடைத் தடவின் புள்ளொலித்து ஓவாத் 
    
கௌவையா கின்றது ஐயநின் அருளே. 

     (சொ - ள்.) ஐய புன்னை அம்கானல் புணர்குறி வாய்த்தபின் ஈர்ஓதியென் தோழிக்கு - ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; அன்னோ நின் அருள் படுமணி யானைப் பசும்பூண் சோழர் - ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய