பக்கம் எண் :


4


1. கபிலர்
திணை : குறிஞ்சி.

துறை : இது, பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

    (து - ம்.)என்பது, தலைவன் பிரியக்கருதிய தறிந்த தோழி தலைவியிடங் கூறலும், தலைவி அவரை இன்றியமையாத என்னை வருந்தும்படி விட்டுப் பிரிகின்ற அன்னதொரு குணக்குறைபாடு இலரெனத் தலைவனைப் புகழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை,
   
"அவனறி வாற்ற அறியு மாகலின 
   
 ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் 
   
 உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற்  
   
 பெருமையிற் றிரியா அன்பின் கண்ணும்" 

    (தொல். கற்.

எனவரும் விதியின்கண் "ஏற்றற்கண்ணும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

     
நின்ற சொல்லரநீடுதோன் றினியர் 
     
என்றும் என்றோள் பிரிபறி யலரே 
     
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்  
     
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் 
5
புரைய மன்ற புரையோர் கேண்மை 
     
நீரின் றமையா வுலகம் போலத்  
     
தம்மின் றமையா நந்நயந் தருளி 
     
நறுநுதல் பசத்த லஞ்சிச்  
     
சிறுமை உறுபவோ செய்பறி யலரே. 

     (சொ - ள்.) நின்ற சொல்லர்-தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நீடு தோன்று இனியர் - நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; என்றும் என் தோள் பிரிபு அறியலர் - எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; புரையோர் கேண்மை - அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீம் தேன் போல மன்ற புரைய - தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத்

  
 (பாடம்) 1. 
நின்ற சொல்லொடு.
 2. 
நீடு தோறினியர