பக்கம் எண் :


409


     ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடின்றும் இலை - ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு; எ-று.

     (வி - ம்.)நனிமிக: ஒருபொருட் பன்மொழி. உவக்காண் - உவ்விடத்தே பார். ஏர்தரல் - எழுதல். இஃதென்ன வியப்பு என்றது சொல்லெச்சம். வியப்புடையிரவலர் - செய்யுளால் தன்னைப் புகழ்தலையுடைய இரவலர்.

     அவர்பால் அன்பிலள் கொடியளென்று ஏதிலாட்டியர் ஏசுபவாதலின் அத்திறத்தேனும் புலப்பாயாக வென்பாள் ஊடின்றுமிலையோ என்றாள். வருந்தாது மகிழ்ந்த வண்ணமே தலைவரை எதிரேற்குந் தன்மையைக் காணென்பாள் அவர் குறித்த மழை தோன்று மென்றாள். மெய்ப்பாடு -பெருமிதம். பயன் - மாறுபடக்கூறல்.

     (பெரு - ரை.) இது, தலைவன் பிரிவினால் பெரிதும் வருந்தி "கையறவு" என்னும் ஆறாம் மெய்ப்பாடெய்தியிருந்த தலைவியைத் தோழி அவன் கூறிப் போந்த கார்ப்பருவ வரவுகாட்டி அவளை விழிப்பூட்டி ஆற்றுவித்தபடியாம். தலைவி ஆற்றியிருப்பதை அறிந்து தோழி வியந்து கூறினாள் எனக் கோடல் தகுதியன்றென்க. ஊடின்றுமிலையே என்றது, கையறவு என்னும் மெய்ப்பாடு. மழைகாண் என்றது, பருவ வரவு காட்டியபடியாம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

(237)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தலைமகள் பருவங்கண்டழிந்தது.

     (து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வரக்கண்டும் அவன் வாராமையைக் கருதிய தலைவி மேகத்தை நோக்கி, "மேகமே, அவர்நிலையைக் கூறக்கேளென்று நீ இங்கு வருதல் சால்புடையதன்று கண்டாய், நின்குரல் பாம்பின் படத்தை மழுங்கச் செய்வதன்றி அவர் நெஞ்சைக் கனியச் செய்யாமையின் இனிய வல்ல மன்"னென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.

    
வறங்கொல வீந்த கானத்துக் குறும்பூங் 
    
கோதை மகளிர் குழூஉநிரை கடுப்ப 
    
வண்டுவாய் திறப்ப விண்ட பிடவ 
    
மாலை அந்தி மாலதர் நண்ணிய 
5
பருவஞ் செய்த கருவி மாமழை 
    
அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல் 
    
சான்றோர்ப் புரைவதோ அன்றே மான்றுடன் 
    
உரவுரும் உரறு நீரின் பரந்த