(து - ம்.) என்பது, பிரிவின்கண் மெலிவுற்ற தலைமகள் "என் முயக்கத்தை வெறுத்துச் செல்லுதலால் என்னுடம்பு துயில் கொள்ளாது இடையீடுபடுவதாயினும் அவர் சென்ற காடு மலைபோல அச்சத்தைத் தாரா நின்றது; அதனைப் படைத்த கொடியோன்றானும் அதன் கண்ணே சென்று நனி வருந்துவானாக"வென நொந்து கூறாநிற்பது.