பக்கம் எண் :


421


அன்னைக்கு இந் நோய் தணியுமாறு உரைத்தலொன்றுஞ் செய்திலையென்றாள்.

     உள்ளுறை :- கூதாளி மலரில் வீழ்ந்துண்ணுதலாலே அதன் மணம் நாறுகின்ற வண்டுபாடும் ஓசையை யாழோசை போலுமென்று அசுணமான் ஆராயுமென்றது, என்னைத் தலைவன் முயங்கி விடுத்தலானாகிய வேறுபாட்டைக் கண்டு இது முருகணங்கு போலுமென அன்னை ஆராய நிற்குமே என்றதாம். மெய்ப்பாடு - வருத்தம்பற்றிய வெகுளி. பயன் - தோழியைத் தன்முகமாக்குதல்.

     (பெரு - ரை.) பயன் - அறத்தொடு நிற்றல் என்க. மாதர் வண்டின் தீங்குரல் அசுணம் ஓர்க்கும் என்றது, நமது மறையை நீ அன்னைக்கு (செவிலிக்கு)க் குறிப்பாக உணர்த்துவாயாயின் அவள் மகிழ்ந்து அதற்கு ஆவன செய்யச் சமைவாள் என்னும் உள்ளுறை பொருளது என்றலே துறைக்குப் பொருந்தும் கருத்தென்க. "வீழ்ந்த மாரி" என்றும், "செயலை மருதளிர்" என்றும், "மாமைப் பசலை" என்றும் பாடவேற்றுமைகள் உண்டு.

(244)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது.

     (து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகன் கூறிய குறையை முடிப்பதாக உடன்பட்ட தோழி, மீண்டுவந்து தலைவியின் குறிப்பைத் தன்வயம் ஆக்குவாளாய் உரையாடுகின்றவள், சேர்ப்பனொருவன் நம்மை நோக்கி, என்னுயிரைக் கைக்கொண்ட நீ யாவளோ என்று அவனால் நாம் வருந்துவது அறியாமல் நம்மால் அவன் வருந்தினதாகக் கூறித் தொழுது நின்றது, நகையாயிற்றுக் காணென நகையாடிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "மறைந்தவ ளருகத் தன்னொடும் அவளொடும், முதன்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
நகையா கின்றே தோழி தகைய 
    
அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை 
    
மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத் 
    
துணிநீர்ப் பௌவந் துணையொடு ஆடி 
5
ஒழுகுநுண் நுசுப்பின் அகன்ற அல்குல் 
    
தெளிதீங் கிளவி யாரை யோவென 
    
அரிதுபுணர் இன்னுயிர் வௌவிய நீயெனப் 
    
பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் 
    
தான்நம் அணங்குதல் அறியான் நம்மின் 
10
தான்அணங் குற்றமை கூறிக் கானல்