(து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகன் கூறிய குறையை முடிப்பதாக உடன்பட்ட தோழி, மீண்டுவந்து தலைவியின் குறிப்பைத் தன்வயம் ஆக்குவாளாய் உரையாடுகின்றவள், சேர்ப்பனொருவன் நம்மை நோக்கி, என்னுயிரைக் கைக்கொண்ட நீ யாவளோ என்று அவனால் நாம் வருந்துவது அறியாமல் நம்மால் அவன் வருந்தினதாகக் கூறித் தொழுது நின்றது, நகையாயிற்றுக் காணென நகையாடிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவ ளருகத் தன்னொடும் அவளொடும், முதன்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| நகையா கின்றே தோழி தகைய |
| அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை |
| மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத் |
| துணிநீர்ப் பௌவந் துணையொடு ஆடி |
5 | ஒழுகுநுண் நுசுப்பின் அகன்ற அல்குல் |
| தெளிதீங் கிளவி யாரை யோவென |
் | அரிதுபுணர் இன்னுயிர் வௌவிய நீயெனப் |
| பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் |
| தான்நம் அணங்குதல் அறியான் நம்மின் |
10 | தான்அணங் குற்றமை கூறிக் கானல் |