(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாற் கொள்க.
| உலவை ஓமை ஒல்குநிலை ஒடுங்கிச் |
| சிள்வீடு கறங்குஞ் சேய்நாட்டு அத்தம் |
| திறம்புரி கொள்கையொடு இறந்துசெயின் அல்லது |
| அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்லென |
5 | வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த |
| வினையிடை விலங்கல போலும் புனைசுவர்ப் |
| பாவை யன்ன பழிதீர் காட்சி |
| ஐதேய்ந்து அகன்ற அல்குல் மைகூர்ந்து |
| மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் |
10 | முயல்வேட்டு எழுந்த முடுகுவிசைக் கதநாய் |
| நன்னாப் புரையுஞ் சீறடிப் |
| பொம்மல் ஓதிப் புனையிழை குணனே. |
(சொ - ள்.)சுவர்ப் புனை பாவை அன்ன பழிதீர் காட்சி ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் - சுவரில் அலங்கரித்து எழுதிய பிரதிமை போன்ற குற்றந்தீர்ந்த காட்சியையும் மெல்லியதாய்ப் பொருந்தியகன்ற அல்குலையும்; மை கூர்ந்து மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழைக்கண் - மையெழுதப்பட்டு நீலமலரை எதிரிட்டுப் பிணைத்தாற் போன்ற கரிய இமைகளையுடைய குளிர்ச்சியுற்ற கண்ணையும்; முயல்வேட்டு எழுந்த முடுகு விசைக் கதநாய் நல் நாப் புரையும் சீறடி - முயலைப் பிடிக்க வெழுந்த விரைந்த செலவும் சினமுமுடைய நாயினது நல்ல நாவினை யொத்த சிறிய அடிகளையும்; பொம்மல் ஓதிப் புனை இழை குணனே - செறிந்த கூந்தலையும் புனைந்த கலன்களையுமுடைய இவளுடைய குணங்கள்; ஓமை உலவை ஒல்கு நிலை ஒடுங்கிச் சிள் வீடு கறங்கும் சேய்நாட்டு அத்தம் - கிளைகளையுடைய ஓமை மரத்தின் பட்டகிளைகளுள் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலியாநிற்கும் வேற்றுநாட்டின்கண்ணே; திறம்புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது - செல்லுகின்ற நெறியில் இன்னவாறு செல்வோமென்னுங் கோட்பாட்டினோடு சென்றிருந்து பொருள் சேர்த்தாலல்லாமல்; இருந்தோர்க்கு அரும்பொருள் கூட்டம் இல் என - வீட்டின்கண் கவலையுடன் மனமடிந்து இருந்தவர்க்கு அரிய பொருளின் சேர்க்கை ஒருபொழுதும் சேர்வதில்லை யென்று; வலியா நெஞ்சம் வலிப்ப - இதுவரையிலும் உடன்பட்டெழாத நெஞ்சம் ஒருப்படுதலால்; சூழ்ந்த வினைஇடை விலங்கல் போலும் - தலைவர் ஆராய்ந்து