பக்கம் எண் :


433


தொடங்கிய காரியத்தின்கண்ணே குறுக்கிட்டுத் தடுத்தல் செய்தில போலும்; ஆதலின் ஆற்றியிருக்கற்பால தன்றி வேறு செய்யக்கடவது யாதுமில்லை; எ - று.

    (வி - ம்.) சிள்வீடு - ஒருவகை வண்டு.

    இறைச்சி :- சிள்வீடு ஓமைமரத்தின் பட்ட கிளையிலுள்ளாலொடுங்கி ஒலியாநிற்குமென்றது, இவள்கொண்ட காமமானது கற்பின் மிகுதியால் வெளிப்படத் தோன்றாது உள்ளகத்தொடுங்கிக் கனற்றாநிற்குமே யென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல். கைகோள் - கற்பு.

    (பெரு - ரை.) உலவை - ஒரு மரமுமாம். உலர்ந்த ஓமை மரத்தின்கண் ஒடுங்கியிருந்து சிள்வீடு கறங்கும் என்றது, இன்மையதிளிவீனிடையே தலைவர் நெஞ்சத்தே பொருட்பிணி ஒடுங்கியிருந்து அவரை இடையறாது ஊக்குதலால் என்னும் இறைச்சிப்பொருள் தோன்ற நின்றதுணர்க. திறம் - முயற்சி. வலியாநெஞ்சம் என்றது, நின்னைப் பிரிதற்கு இயலாமையால் உடன்பட்டெழாத நெஞ்சம் என்பதுபட நின்றது. எனவே அவர் பொருளீட்டியவுடனேயே விரைந்துவருவர் என்பது குறிப்பு.

    தலைவர் நெடிது ஆராய்ந்தபின்னரே பிரிந்தனர். ஆதலின் அப்பிரிவு இன்றியமையாமையின் யாமும் ஆற்றியிருத்தல்வேண்டும் என்று ஏதுக்காட்டியபடியாம். இருந்தோர் என்றது மடிந்திருந்தோர் என்பது பட நின்றது. எண்ணித் துணிந்த செயலை இடைநின்று தடுத்தல் அறமாகாமையின் குணங்கள் விலங்கல என்றாள். பொருள் இன்றியமையாமையிற் பிரிந்தாரேனும் நின் பேரழகும் நற்குணங்களும் அவரை விரைவில் மீட்டுக்கொடுவருங்காண் என்பாள் புனைசுவர்.....................குணன் என்று நலம் பாராட்டினள்.

(252)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.

    (து - ம்.) என்பது, "தலைவி அழகின் கதிர்ப்பு மிகுதலாலே காவலுட்பட்டவள் ஆயினாள், நீ தானும் வெய்யவாகப் பெருமூச் செறியா நின்று என்னுடைய மொழியைக் கேளா வேறுகருதாநின்றனை, இனி வரைந்தாலல்லாது களவொழுக்கம் எங்ஙனம் நிகழ்த்த இசையுமென்று தோழி தலைவனை நோக்கித் தலைவியின் இற்செறிப்பு அறிவுறுத்தி வரைவுகடாவா நிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்.................................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாற் கொள்க.

    
புள்ளுப்பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் 
    
பள்ளி யானையின் வெய்ய உயிரினை 
    
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து