(து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவிபாற்சென்று ஒரு தோன்றல் தினைப்புனத்து நம்மொடு கிளியோப்பித் தன் கருத்தை நிகழ்த்துமிடம் பெறானாகி அகன்றனன்; அவனைக் கண்டு என் தொடிகழல அவற்றைச் செறித்து வந்தேனென்று அவனைத் தன்னுள்ளம் விரும்பினது போலத் தலைவி அதனை ஆராய்ந்து தன்னை விரும்பினன்" எனக் கொள்ளும் வண்ணங் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.
| அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன |
| செவ்வரி யிதழ சேணாறு நறவின்1 |
| நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் |
| பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் |
5 | வளமலை நாடன் நெருநல் நம்மொடு |
| கிளைமலி சிறுதினைக் கிளிகடிந் தசைஇச் |
| சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்த |
(பாடம்) 1. | சேணாறு பிடவியன். |