பக்கம் எண் :


443


    உள்ளுறை :- மகளிரிட்ட பலிச்சோற்றை யுண்டு அங்காடியிலே குவித்த இறாமீனைக் கவர்ந்த காக்கை வங்கத்துக் கூம்பிற் சென்று தங்குமென்றது, பாங்கற் கூட்டத்தால் நலனுகர்ந்து பாங்கியிற் கூட்டத்தால் ஆய தனையுந் துய்த்த நீ கவர்ச்சியின்றி நின்னூரின்கண்ணே சென்று தங்கா நின்றனை யென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) தூங்கல் வங்கம் - இயக்கமற்ற மரக்கலம். கூம்பு - பாய்மரம். ஏரும் எல்லும் வளையும் ஓடுவகண்டென உம்மை விரிப்பினுமாம். ஞாயிறு பகலுக்கு ஆகுபெயராக்கினுமாம்.

(258)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழி தலைமகளைச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைவன் கேட்டு வரையுமாற்றானே தோழி தலைவியை நோக்கித் "தினை முற்றின; இனி அவற்றைக் கொய்த உடன் நின்னை இல்வயிற் செறிப்பாராதலின் நாடனோடு இயைந்த கேண்மை இனி அரியவாகுமெனக் கருதா நிற்பேன்; அப்பால் யாது செய்வா"மெனக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதுவுமது.

    
யாங்குச்செய் வாங்கொல் தோழி பொன்வீ 
    
வேங்கை ஓங்கிய தேம்கமழ் சாரல் 
    
பெருங்கல் நாடனொடு இரும்புனத்து அல்கிச் 
    
செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி அவ்வாய்ப் 
5
பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்  
    
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்  
    
பெரிதமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி  
    
அரிய போலக் காண்பேன் விரிதிரைக் 
    
கடல்பெயர்ந் தனைய ஆகிப் 
10
புலர்பதங் கொண்டன ஏனற் குரலே.