பக்கம் எண் :


444


நாடனொடு இரும்புனத்து அல்கிச் செவ்வாய்ப் பைங் கிளி ஓப்பி - பெரிய மலைநாடனொடு கரிய தினைப்புனத்திலே தங்கிச் சிவந்த வாயையுடைய பசிய கிளியை ஓப்பி; அவ்வாய்ப் பெருவரை அடுக்கத்து அருவி ஆடி - அங்குள்ள கரிய பக்க மலையின்கணுள்ள அருவியில் நீர்விளையாட்டயர்ந்து; சாரல் ஆரம் வண்டு பட நீவி - மலைச்சாரலி லெழுந்த சந்தனமரம் நறுமணங் கமழ்தலால் வண்டு வந்து விழும்படி அச் சந்தனத்தேய்வையைப் பூசி; பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி அரிய போலக் காண்பேன் - பெரிதும் விரும்பி இயைந்த நட்பு மிகச் சிறுகி இனி அது தானும் இல்லையாகும் போல யான் காண்பேன்!; யாங்குச் செய்வாம் - ஆதலால் நாம் என்ன செய்ய மாட்டுவேம்; எ - று.

    (வி - ம்.) நீவுதல் - கையாலே தடவுதல்; இங்குப் பூசுதலுக்காயிற்று. நாடனொடு இயைந்த கேண்மை யெனக் கூட்டுக.

    நாடனுடன் அல்கி ஓப்பி ஆடியியைந்த பெரிய நட்பாதலின் அதன்கண் இடையற வெய்தியவழிக் காதலி இறந்துபடுமென அவனுக்கு அறிவுறுத்த வேண்டி அரியபோலக் காண்பே னென்றாள். முன்போல நீங்கா துறைதல் வரைந்தன்றி இயலாதாதலின் வரைந்தெய்துக வெனக் கடாயதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'இனி அவற்றை நமர் கொய்துகொண்டு போவதன்றி நின்னையும் இல்லின் கண்ணே செறிப்பர்' என்பது குறிப்பெச்சம்.

(259)
  
    திணை : மருதம்.

    துறை : இஃது, ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் தலைமகளைத் தழுவலும் அவள் கொண்டிருந்த சினத்தை உள்ளடக்கி உடன்பட்டாள் போன்று "ஊரனே! நீ இப்பொழுது மிக்க விருப்பமுற்றாய் போன்று புல்லுகின்றனை, முன்பு என் கோதை வாடுமாறு வையகன்று ஒழிந்தா யென்பதை யான் அறிவேன்" என உள்ளுறையால் அவன் பரத்தையிற் பிரிந்ததனையுங் கூறி ஊடல் நீங்கா நிற்பது.

    (இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல். கற்.6) என்னும் நூற்பாவின்கண் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" என்பதனாலமைத்துக் கொள்க.

    
கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை 
    
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத் 
    
தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது 
    
குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர